மருத்துவஊழியர்களிடம் வேகமாக பரவும் கொரோனா.. ஸ்டான்லி மருத்துவமனையில் 13 பயிற்சி டாக்டர்கள் பாதிப்பு
சென்னை: ஸ்டான்லி மருத்துவமனையில் 13 பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 3,509 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதில் சென்னையில் மட்டும் 1,834 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா இப்படி காட்டுத்தீ போல பரவி கொண்டிருப்பதால், மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கும் எளிதாக தொற்றிக் கொள்கிறது.
சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையின் டீன் ஜெயந்தி கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து புதிய டீன் நியமிக்கப்பட்டார்.
பல செவிலியர்கள், மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டான்லி பொதுமருத்துவமனையில், இதுபோல 13 பயிற்சி மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் ஸ்டான்லியில், சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரையில் ஊரடங்கு: மக்கள் அலைமோதுகிறார்கள் - கொரோனாவை கட்டுப்படுத்துவது சவால்தான்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று, புதிய உச்சத்தை தொட்டது. தமிழகத்தில் மேலும் 3,509 பேருக்கு கொரோனா பாதிப்பு. முதல் முறையாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது.