உச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு குறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை!
சென்னை: சென்னையில் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000க்கும் குறைவாக வந்துள்ளது. இதனால் சென்னை வேகமாக கொரோனாவில் இருந்து மீண்டும் வருகிறது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5883 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 290907 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமாக உள்ள ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 53481 ஆக உள்ளது. மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.

என்ன சந்தோசம்
இதில் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் சென்னையில் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையே 1000க்கும் குறைவாக வந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 108124 ஆக உள்ளது. சென்னையில் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக 11734 பேர் மடடுமே இருக்கிறார்கள்.

மொத்தமாக குணமடைந்தனர்
சென்னையில் இதுவரை 94100 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 869 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று 984 கேஸ்கள் வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 100க்கும் குறைவான கேஸ்கள் சென்னையில் வைத்துள்ளது.

குறைகிறது
சென்னையில் அதே அளவு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டும் கூட, கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. இதன் அர்த்தம் சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதாகும். அதோடு சென்னையில் முன்பு ஒரு நாளுக்கு 2000க்கும் அதிகமான கேஸ்கள் கூட வந்தது. அதன்பின் 1500க்கும் குறைவாக சென்றது. இப்போது 1000க்கும் குறைவாக சென்றுள்ளது .

உச்சம் இனி இல்லை
இதனால் சென்னை தனது உச்சத்தை கடந்துவிட்டது. இனி கேஸ்கள் வேகமாக குறையும். இனி கொரோனா குறித்து கவலை அடைய வேண்டியது இல்லை. இன்னும் கொஞ்சம் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் போதும், மொத்தமாக கேஸ்களை கட்டுப்படுத்துவிடலாம், என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். தலைநகர் வேகமாக கொரோனாவில் இருந்து விடபட தொடங்கி உள்ளது என்கிறார்கள்.

ஆனால் வேண்டாம்
ஆனால் சென்னையில் இப்போது அவசரப்பட்டு எதையும் திறக்க வேண்டாம். மக்கள் இப்போதும் கவனமாக இருக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும். தினசரி கேஸ்கள் 400க்கும் குறைவாக செல்ல வேண்டும். அப்போதுதான் பரவல் மொத்தமாக குறைந்துள்ளது என்று அர்த்தம். அதுவரை மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications