மீண்டும் திறக்கப்படுகிறது கோயம்பேடு மார்க்கெட்.. செப். 28ம் தேதி முதல் செயல்படும்.. அதிரடி முடிவு!
சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வரும் செப்டம்பர் 28-ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னையிலும் மீண்டும் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
சென்னையில் தொடக்க காலத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க கோயம்பேடு முக்கிய காரணமாக இருந்தது. கோயம்பேடு கிளஸ்டர் காரணமாக தமிழகம் முழுக்க பலருக்கு கொரோனா பரவியது .

சென்னை எப்படி
கடந்த ஏப்ரல் 27ம் தேதிதான் கோயம்பேட்டில் தமிழகத்தில் முதல் நபருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. அங்கிருக்கும் பழக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. அவர் மூலமும், இன்னும் பலர் மூலமும் மார்க்கெட்டில் பலருக்கு பரவியது. அங்கு தொடர்ந்து கொரோனா பரவியதால் மே 5-ம் தேதி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது.

மாற்றம் செய்யப்பட்டது
அங்கு இருந்து மார்கெட் அப்படியே திருமழிசைக்கு மாற்றப்பட்டது. மலர் மற்றும் பழக்கடை மாதவரத்திற்கு மாற்றப்பட்டது. அங்குதான் தற்போது மார்க்கெட் வியாபாரம் நடந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முற்றிலுமாக மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வரும் செப்டம்பர் 28-ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும்ம் திறப்பு
அதற்கு முன்பாக கோயம்பேடு சந்தையில் உள்ள உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி, செப்டம்பர் 18-ம் தேதிமுதல் செயல்படும்.கோயம்பேடு வணிக வளாகத்தில் இதற்காக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த பணிகள் முடியும் என்று கூறப்படுகிறது.வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா மற்றும் சங்க உறுப்பினர்கள் இன்று துணை முதல்வர் ஓ . பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.

எப்படி உள்ளது
இந்த சந்திப்பை தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.மிகுந்த கட்டுப்பாட்டுடன் இந்த மார்க்கெட் மீண்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ஒவ்வொரு கடையிலும் மூன்று அடக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த கிருமிநாசினிகள் இதற்காக பயன்படுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications