விழுப்புரத்திலிருந்து வந்தார்.. மறுநாளே கொரோனா.. மருத்துவரால் கிருஷ்ணகிரியில் பீதி.. என்ன நடந்தது?
கொரோனா பாதித்த மருத்துவர் ஒருவர் கிருஷ்ணகிரியில் தங்கிவிட்டு சென்ற காரணத்தால் கிருஷ்ணகிரியில் கொரோனா பரவி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
சென்னை: கொரோனா பாதித்த மருத்துவர் ஒருவர் கிருஷ்ணகிரியில் தங்கிவிட்டு சென்ற காரணத்தால் கிருஷ்ணகிரியில் கொரோனா பரவி இருக்க வாய்ப்புள்ளது என்று அஞ்சப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 121 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2058 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்ட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 902 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. கடுமையாக தடுப்பு நடடிக்கைகள் மற்றும் ஊரடங்கு காரணமாக அங்கு யாருக்கும் கொரோனா பரவவில்லை.

திருச்சி நிலை
கிருஷ்ணகிரியை தொடர்ந்து நேற்று ஈரோட்டில் எல்லா கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர். இதனால் ஈரோட்டில் இருந்து கொரோனா விரட்டப்பட்டது. அதேபோல் கொரோனா நோயாளிகள் எல்லோரும் குணப்படுத்தப்பட்ட காரணத்தால் திருச்சியிலும் மொத்தமாக கொரோனா விரட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் இரண்டு நாட்களுக்கு முன் ஒருவருக்கு கொரோனா வந்துவிட்டு, அவருக்கு பின் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

என்ன நம்பிக்கை
கிருஷ்ணகிரியில் கொரோனா பரவாமல் இருப்பது தமிழகம் முழுமைக்கும் முக்கிய நல்ல செய்தியாக, நம்பிக்கையாக மாறியுள்ளது. கிருஷ்ணகிரியை பின்பற்றி தமிழகம் முழுக்க கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி எப்படி கண்டெயின்மெண்ட் திட்டத்தை செயல்படுத்தியது, அங்கு எல்லைகள் எப்படி காக்கக்கப்பட்டது என்பது தமிழகம் முழுமைக்கும் மிக முக்கியமான பாடமாக மாறியுள்ளது.

அச்சம் எழுந்துள்ளது
ஆனால் தற்போது கிருஷ்ணகிரியில் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா அச்சத்தால் கிருஷ்ணகிரி மொத்தமாக தனிமைப்படுத்தப்படுகிறது. கொரோனா பாதித்த விழுப்புரம் மருத்துவர் கிருஷ்ணகிரிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி வந்துவிட்டு சென்ற பின்தான் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் உறவினர் வீடு ஒன்றில் இவர் தங்கி உள்ளார்.

அதிர்ச்சி அளிக்கிறது
கிருஷ்ணகிரியில் இவர் மொத்தம் 11 பேரை சந்தித்துவிட்டு சென்றுள்ளார். இவர்கள் எல்லோரும் இவரின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் எல்லோரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று வரை தொற்றில்லா பச்சை பகுதியாக இருந்த கிருஷ்ணகிரியில் 11 பேருக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மக்கள் அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications