தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு- இயல்பு நிலை திரும்புகிறது- டீ கடைகளும் திறப்பு
சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெருமளவு இன்று முதல் தளர்த்தப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் டீ கடைகள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.
Recommended Video
கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் வரும் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. இருப்பினும் நாடு முழுவதும் லாக்டவுன் கால கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் பொது போக்குவரத்து தவிர பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களை இன்று முதல் திறக்கலாம் என தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. இதனால் இன்று காலை 6 மணி முதல் டீ கடைகள் உள்ளிட்டவைகள் திறக்கப்பட்டன.
டீ கடைகளின் அடையாளமான பெஞ்சுகள், நாற்காலிகள் அகற்றப்பட்டன. சமூக இடைவெளியை குறிக்கும் கட்டங்கள், வளையங்கள் வரையப்பட்டிருந்தன. இருப்பினும் டீ கடைகளில் கூட்டம் கூட்டமாக நின்று பேசுகிற அணுகுமுறையை காண முடிந்தது.
தமிழகத்தில் இன்று மொத்தம் 34 வகையான கடைகள் திறக்கப்படுகின்றன. சலூன்கள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை மட்டும்தான் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ள கடைகளில் அனைவரும் கட்டாயம் முககக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் லாக்டவுன் தளர்வு தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பு விவரம்:














Click it and Unblock the Notifications