கொரோனா பரவுதே.. பஸ், ரயிலில் பயணிக்கலாமா.. என்ன மாதிரி முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா தொற்று பரவும் இந்த காலகட்டத்தில் மக்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படுகிறது. அதுகுறித்து மருத்துவர்கள் கூறிய விளக்கங்களின் ஒரு தொகுப்பு.

- கொரோனா தொற்று பரவும் இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். அவசியம் என்றால் மட்டுமே வெளியில் செல்வது என்பதை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- வீட்டுக்கு விருந்தினர்கள் அழைப்பதையும், அல்லது விருந்தினராக செல்வதையும் தவிர்க்கலாம்.
- கூடுமானவரை விழாக்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். தவிர்க்க முடியாத நிலையில் அதிக கூட்டம் இல்லாமல் விழாக்களை எளிமையாக நடத்துவது நல்லது.
- முடிந்தவரை பொதுப் போக்குவரத்தை தவிர்க்க வேண்டும், தவிர்க்க முடியாத பயணம் எனில், பயணத்தின் போது மிகுந்த கவனம் தேவை.
- பேருந்து, ரயில் பயணத்தின் போது மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்க முயற்சிக்கலாம், ஏசி வசதி இல்லாத பஸ் மற்றும் ரயில் பயணம் இன்னும் சிறப்பு.
- கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்கும் தற்காப்பு முறைகளில் உணவகங்களுக்கு செல்வதை தவிர்ப்பது முக்கியமானது
- உணவகங்களில் அதிகம் பரவ வாய்ப்புள்ளது என்பதால் அதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டியது அவசியம், வேறு வழியில்லை என்றால் சானிடைசர் பயன்படுத்துவது அவசியம்
- உணவு பொருட்கள் பல இடங்களில் பல நபர்கள் மூலம் டெலிவரி செய்யப்படும் என்பதால் அதை தவிர்த்தல் நலம், தவிர்க்கமுடியாத பட்சத்தில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தால் அதை பிரித்து பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு கைகளை நன்றாக கழுவிய பின்னர் சாப்பிடலாம்
- வெளிநாட்டு, உள்நாட்டு பகுதிகளுக்கு பயணிப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்
- காய்ச்சல் இருமல் தும்மல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்












Click it and Unblock the Notifications