கொரோனா கிளஸ்டர்.. சென்னையில் உள்ள அந்த 34 இடங்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் டீம் போடும் "மைக்ரோ பிளான்"
தமிழகத்தில் கொரோனாவை தடுப்பதற்காக புதிய மைக்ரோ பிளான் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் கொரோனாவை தடுப்பதற்காக புதிய மைக்ரோ பிளான் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. அதிக கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் கொரோனாவை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. சென்னையில் தினமும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னை நிலை
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவை தடுப்பதற்காக புதிய மைக்ரோ பிளான் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. அதிக கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் கொரோனாவை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 34 இடங்கள் இதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது தீவிர சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

புதிய பிளான்
மொத்தம் மூன்று சோன்கள்தான் சென்னையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம் , திருவிக நகர் ஆகிய பகுதிகள்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த 34 இடங்களில் 30 இடங்கள் இந்த பகுதிக்கு கீழ்தான் வருகிறது. இந்த நிலையில் தற்போது இங்கு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதிய நம்ம சென்னை கோவிட் விரட்டும் என்று இந்த மைக்ரோ பிளானிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எத்தனை குழுக்கள்
இந்த திட்டத்தின்படி இந்த 34 இடங்களில் மொத்தம் 500 பேர் கொண்ட குழுக்கள் களமிறக்கப்படும். இவர்கள் வீடு வீடாக சென்று சோதனைகளில் ஈடுபடுவார்கள். இந்த 34 பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளும் ஒன்று விடாமல் சோதனை செய்யப்படும். இதில் 100 மருத்துவர்கள் வரை இருப்பார்கள். 120 சுகாதார பணியாளர்கள் இருப்பார்கள். வயதானவர்களுக்கு சோதனை செய்ய அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

மொபைல் டெஸ்டிங் எப்படி
அதே சமயம் இதற்காக மொபைல் டெஸ்டிங் குழுக்கள் அமைக்கப்படும். 34 இடங்களிலும் மினி கொரோனா கேம்ப்கள் அமைக்கப்படும். இந்த கேம்ப்கள் மூலம் அந்த பகுதிகளில் எல்லோருக்கும் கொரோனா சோதனைகள் செய்யப்படும். இதன் மூலம் கொரோனா பரவலை கண்டுகொள்ள முடியும், என்று கூறப்பட்டுள்ளது. இன்றில் இருந்து இந்த குழு தங்கள் பணிகளை தொடங்கும், என்றும் கூறப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications