அதற்குத்தான் போராடுகிறோம்.. 2 வகையான கொரோனா சர்வைலன்ஸ்.. அரசின் பிளான்.. பீலா ராஜேஷ் செம விளக்கம்!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவை தடுப்பதற்காக இரண்டு வகையான சர்வைலன்ஸ் பணிகள் நடப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 738ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 48 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தமிழகத்தில் 4 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் எப்படி நடக்கிறது, இதற்காக என்ன திட்டங்கள் வகுக்கப்பட்டது என்று கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கு தற்போது தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

என்ன பேட்டி
பீலா ராஜேஷ் தனது பேட்டியில் கன்டெய்ன்மெண்ட் பணிகளை தீவிரமாக செய்து வருகிறோம். முதலில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு இடத்தை தேர்வு செய்வோம். அதை வைத்து மேப் உருவாக்குவோம். அங்கு எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று சோதனை செய்வோம். அந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட கிலோ மீட்டர் பகுதிக்கு சோதனைகளை செய்வோம். இதைத்தான் கன்டெய்ன்மெண்ட் சோன் என்று கூறுகிறோம்.

இரண்டு வகை சோதனை
அதன்பின் அங்கு இரண்டு வகையில் சர்வைலன்ஸ் பணிகளை மேற்கொள்வோம். இதை ஆக்டிவ் சர்வைலன்ஸ் , பாஸிவ் சர்வைலன்ஸ் என்று கூறுவோம். அங்கு எத்தனை பேருக்கு கொரோனா அறிகுறி இருக்கிறது என்று பார்ப்போம். அறிகுறி உள்ளவர்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் ஆக்டிவ் சர்வைலன்ஸ் செய்து வருகிறோம் குறைவான நபர்கள் இருக்கும் இடத்தில் பாஸிவ் சர்வைலன்ஸ் செய்து வருகிறோம்.

எத்தனை வீடுகள்
இது ஒரு நாள் மட்டும் செய்வதில்லை. தினமும் இந்த கன்டெய்ன்மெண்ட் பகுதிகளுக்கு செல்கிறோம். இதுவரை 34 மாவட்டங்களில் தமிழக அரசு இந்த கன்டெய்ன்மெண்ட் சோதனைகளை செய்து வருகிறது. மொத்தம் 15 லட்சத்து 66448 வீடுகளில் இந்த சோதனைகளை செய்து இருக்கிறோம். இதுவரை மொத்தம் 53 லட்சத்து 67238 பேருக்கு இந்த சோதனைகளை செய்து உள்ளோம்.

ஸ்டேஜ் 2ல் இருக்கிறோம்
38 ஆயிரம் பேர் எங்களுக்காக இதில் களமிறங்கி பணியாற்றி வருகிறார்கள். முக்கியமாக சென்னையில் வீடு வீடாக சென்று பணிகளை செய்து வருகிறோம். தமிழகத்தில் மருத்துவர்களுக்கு போதுமான மாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. எங்கும் மாஸ்க் பற்றாக்குறை நிலவவில்லை, தமிழகத்தில் இன்னும் ஸ்டேஜ் 3 வரவில்லை. ஸ்டேஜ் 2ல் இருக்கிறோம். 3 செல்லாமல் தடுப்பது முக்கியம். அதற்காகத்தான் போராடி வருகிறோம் என்று பீலா ராஜேஷ் விளக்கி உள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications