இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,020 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 229 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,020 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மூன்றாம் அலை பாதிப்பு அக்டோபர் - டிசம்பர் இடையில் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து கேஸ்கள் குறைந்து வருகிறது.

இதுவரை மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் இந்தியாவில் தெரியவில்லை. தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிக அளவில் வெளியே சென்று வருகிறார்கள். இது ஒருவேளை கொரோனா கேஸ்களை அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

கொரோனா

கொரோனா

இந்தியாவில் இதுவரை 3,40,00,500 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2,00,872 பேர் இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 3,33,35,301 பேர் இதுவரை இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 229 பேர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மரணம். 4,51,220 பேர் இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தொடர்ந்து ஒரே அளவில் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகின்றன. 1200-1400 என்ற அளவிலேயே தினமும் கேஸ்கள் பதிவாகி வருகிறது. முழுமையாக கொரோனா கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் பெரிய அளவில் கேஸ்கள் குறைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,80,857 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1289 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 35,814 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 26,29,201 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 15,842 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 65,81,677 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 2069 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 30,525 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,39,621 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,07,936 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 43 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா

கேரளா

கேரளாவில் கடந்த 10 நாட்களாக கொரோனா கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது. இது கேரளா கொரோனா பீக்கை கடந்துவிட்டது என்பதையே உணர்த்துகிறது. கேரளாவில் கொரோனா காரணமாக 48,09,619 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 7,823 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 96,710 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 26,448 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 46,85,932 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 106 பேர் பலியாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா காரணமாக 20,58,065 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 503 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 6,932 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 14,268 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 20,36,865 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 12 பேர் பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+