பள்ளி கல்வித்துறையில் அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி..
சென்னை: அரசுத் தேர்வுகள் தேர்வுகள் இயக்கக இயக்குனருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் அரசு ஊழியர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அண்மையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்பட மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் தலைமைச் செயலகத்தில் மூத்த பொறுப்பில் உள்ள அதிகாரிகள் 2 பேருக்கு அண்மையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அரசுத் தேர்வுகள் தேர்வுகள் இயக்கக இயக்குனருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இயக்குநரின் கார் ஓட்டுநர், தனி உதவியாளருக்கு தொற்று உறுதியான நிலையில், இயக்குநருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அறிகுறி அற்றவர்களிடம் இருந்து கொரோனா பரவுமா.. உலக சுகாதார அமைப்பு புதிய அறிவிப்பு
பள்ளிக் கல்வித்துறையில் இயக்குநர் உட்பட 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.