குட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 36-வது நாளாக குறைந்த கொரோனா தொற்று.. உயிரிழப்பும் குறைகிறது!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 148 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 36-வது நாளாக குறைந்துள்ளது. சென்னையிலும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

5,415 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது ஊரடங்கு தந்த பலன் காரணமாக கொரோனா 2-வது அலை 6,000-க்கு கீழ் வந்து விட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பு குறைவு
இதனால் மொத்த பாதிப்பு 24,60,747 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 148 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனாவுக்கு 9 பேர் இறந்துள்ளனர். அதிகபட்சமாக ஈரோட்டில் 13 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 32,199 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 7,661 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 23,83,624 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

கோவை முதலிடம்
44,924 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,68,409 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,13,55,230 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 314 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. கோவையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

ஈரோடு நிலை என்ன?
கோவையில் மட்டும் 671 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 254 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 78 பேருக்கும், மதுரையில் 92 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 93 பேருக்கும், திருவள்ளூரில் 134 பேருக்கும், திருச்சியில் 198 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 337 பேருக்கும், விருதுநகரில் 67 பேருக்கும், ஈரோட்டில் 574 பேருக்கும், சேலத்தில் 369 பேருக்கும், நாமக்கல்லில் 214 பேருக்கும், தஞ்சாவூரில் 260 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications