கொரோனா - 37 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் நாளை அவரச ஆலோசனை - முக்கிய அறிவிப்பு வெளியாகும்

சென்னை செங்கல்பட்டு மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். காணொளி காட்சி மூலம் இ

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கொரோனா பாதிப்பு மாநிலம் முழுவதும் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்தவும், தடுப்பு நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும், மேலும் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளளது.

காணொளி காட்சி வாயிலாக இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. நாளை நடைபெறும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான முதல்வரின் அவசர ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Covid 19 : TN CM Edapadi Palanisamy to discuss district collectors

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 440,450 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் 13,540 பேருக்கு தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 312 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2710 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,087ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சென்னையில் 1487 பேர் பாதிக்கப்பட்டள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 37 பேர் பலியாகியுள்ளனர். தினசரியும் 2500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வட மாவட்டங்களில் மட்டுமல்லாது தென் மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தனிமைப் படுத்தும் முகாம்களும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

Covid 19 : TN CM Edapadi Palanisamy to discuss district collectors

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரையிலும் இன்று முதல் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனிடையே மேலும் பல மாவட்டங்களில் பொது முடக்கத்தை அமல்படுத்துவது பற்றியும் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்க உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்கும் யோசனைகளைக் கேட்டு அதன் பின்னர் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

Recommended Video

    Coronavirus-க்கு பயன்படுத்த அனுமதி... ஆனால் விலை எவ்வளவு தெரியுமா?

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+