காத்திருந்து தடம்பதித்த இடதுசாரிகள்...சிபிஐ, சிபிஎம் 4 இடங்களில் முன்னிலை
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றன. இவ்விரு கட்சிகளுக்கும் தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் இவ்விரு கட்சிகளும் தலா 2 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தளி, பவானிசாகர், திருப்பூர் வடக்கு, வால்பாறை, திருத்துறைப்பூண்டி, சிவகங்கை ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமச்சந்திரன் மற்றும் திருத்துறைப்பூண்டி தொகுதி வேட்பாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.

இதே போன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல், கந்தர்வக்கோட்டை, திருப்பரங்குன்றம், கோவில்பட்டி, ஆரூர், கிள்வலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டன. இதில் கிள்வலூர் மற்றும் கந்தர்வக்கோட்டை தொகுதிகளில் இக்கட்சி முன்னிலையில் உள்ளது. கிள்வலூரில் மாலியும், கந்தவர்க்கோட்டையில் சின்னதுரையும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்தனர்.
2016 சட்டசபை தேர்தலில் இவ்விரு கட்சிகளுக்கும் தலா 50 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இரு கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் முதல் முறையாக இடதுசாரி கட்சிகள் இல்லாத சட்டசபை கடந்த முறை அமைந்தது. இதன் காரணமாக இந்த முறை மிக குறைவான தொகுதிகளையே இக்கட்சிகளுக்கு திமுக தலைமை ஒதுக்கியது.












Click it and Unblock the Notifications