"டேய்.. பின்னாலயே வர்றேன்டா".. இரவெல்லாம் அழுது தீர்த்த பரிதாப வினோதினி.. அதுக்குன்னு?.. அதிர்ந்த ஆவடி
காதலன் இறந்த துயர் தாங்காமல் ஆவடியை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
சென்னை: சென்னை ஆவடியில் ஒரே நாளில், 2 வேறு வேறு தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.. உறவின் பிரிவின், துயரத்தில் இருந்து மீள முடியாத நிலையில், 2 உயிர்களும் பறிபோயுள்ளன.. என்ன நடந்தது?
ஆவடி பக்தவச்சலபுரம் ஜோதிராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் தணிகைவேல்.. 45 வயதாகிறது.. இவரது அப்பா பெயர் முத்துவீரன் 77 வயதாகிறது.. அம்மா பெயர் சரோஜினி, 64 வயதாகிறது.
இவர்கள் 3 பேருமே ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.. சரோஜினிக்கு கடந்த சில நாட்களாகவே உடம்பு சரியில்லை.. இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்..

மொட்டை மாடி
நேற்றுமுன்தினம் இரவுதான் வீடு திரும்பியிருந்தார்.. ஆனால் அன்றைய தினம் இரவே அவரது உயிர் பிரிந்துவிட்டது.. சிறிது நேரத்தில், தன்னுடைய மனைவியின் அருகில் சென்று பார்த்துள்ளார் கணவர்.. அப்போது, அவர் இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ந்து போனார்.. கதறி கதறி அழுதார்.. அதற்கு மேல் அவரால் அங்கு நிற்க முடியாமல், மனைவியின் ஒரு சேலையை எடுத்துக் கொண்டு, தன்னுடைய வீட்டின் மாடிக்கு ஏறி சென்றார்.. அங்குள்ள கூரையில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு குழாயில், மனைவியின் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்..

படுக்கையில் அம்மா
இத்தனைக்கும் அதே வீட்டில்தான், மகன் இருந்துள்ளார்.. அம்மா இறந்ததை மகனுக்கும் சொல்ல முடியாமல் விக்கி விக்கி அழுத நிலையில், தற்கொலை செய்து கொள்ள, புடவையை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றுவிட்டார்.. நேற்று காலை மகன் தணிகைவேல், பெற்றோர் தங்கி இருந்த ரூமுக்குள் சென்று பார்த்தார். அப்போதுதான் அம்மா படுக்கையில் இறந்து கிடப்பதை பார்த்தார்.. அப்பாவை தேடி பார்த்தபோது, அவர் பிணமாக தொங்குவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்... இதுபற்றி ஆவடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் விரைந்து வந்து, 2 பேரின் சடலத்தையும் மீட்டு கொண்டுபோனார்கள்..

இரும்பு கம்பி
இதே ஆவடியில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. கோவில்பாதகை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.. 62 வயதாகிறது.. இவர் கூலி வேலை செய்து வருகிறார்.. இவரது மகள் வினோதினி.. 22 வயதாகிறது.. இவர் வீட்டிலிருந்தே அழகப்பா யூனிவர்சிட்டியில் எம்பிஏ படித்து வந்துள்ளார்.. படிக்கும்போது இவருடன் படித்த கரிமேடு பகுதியை சேர்ந்த வசந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார்... இந்த நிலையில், கடந்த 10ம் தேதி வசந்த் கும்மிடிப்பூண்டி அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது..

பெட்ரூமில்
காதலன் மரண செய்தி கேட்டதுமே, அதிர்ந்து போய் உட்கார்ந்துவிட்டார் வினோதினி.. வீட்டில் யாரிடமும் பேசவில்லை.. பித்து பிடித்ததுபோல் இருந்துள்ளார்.. காதலனையும் மறக்க முடியாமல் மன உளைச்சலில் தவித்து வந்துள்ளார்.. நேற்று முன்தினம் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில், தற்கொலை செய்து கொண்டார்.. ரொம்ப நேரம் ஆகியும் ரூமை விட்டு வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர் வினோதினி வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

வினோதினி
அப்போதுதான் வினோதினி பெட்ரூமிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது... உடனே ஆவடி டேங்க் பேக்டரி போலீசுக்கு தகவல் தரப்படவும், அவர்கள் விரைந்து வந்து, வினோதினியின் சடலத்தை உடலை கீழே இறக்கி, போஸ்ட் மார்ட்டம் செய்ய கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி இல்லாத உலகில் வாழவே கூடாது என்றும், காதலன் இல்லாத உலகில் வாழவே முடியாது என்றும், 2 வேறு வேறு தற்கொலைகள் ஆவடி மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications