காற்று வாங்க மெரினாவில் கூடிய கூட்டம்.. திருப்பிய அனுப்பிய போலீஸ்.. மக்கள் திடீர் யூடர்ன்
சென்னை: ஞாயிறு ஊரடங்கு இல்லை என்பதால் ஆசையாக பலரும் இன்று சென்னை மெரினா கடற்கரைக்கு குவிந்தனர். ஆனால் அவர்களை போலீசார் தடை உள்ளதை சுட்டிக்காட்டி திருப்பி அனுப்பினர். இதனால் அங்கிருந்து பலர் பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிக்கு சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அங்கும் சென்று மக்களை திருப்பி அனுப்பினர்.
Recommended Video
ஐந்து மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக ஞாயிறு அன்று ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை. பேருந்துகளும் இயங்கி இயல்பு நிலை சென்னையில் திரும்பியுள்ளது.
மக்கள் ஆர்வமுடன் கறிகடைகளிலும், மீன் கடைகளிலும் குவிந்தனர். ஆனால் பலரும் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை மறந்து விரும்பியதை வாங்கி சென்றனர்.

உப்புக்காற்றில் ஆனந்தம்
பொதுவாக கொரோனாவிற்கு முன்பு சென்னை மக்களின் பெரிய பொழுதுபோக்கு என்றால் மெரினா கடற்கரைக்கு வந்து காற்று வாங்குவது தான். புழுக்கம் நிறைந்த வீட்டில் இருந்து புறப்பட்டு உப்புக்காற்றில் மணலில் தவழ்ந்து குழந்தை போல் மக்கள் குவிந்து சந்தோஷமாக இருந்துவிட்டு செல்வார்கள். இதனால் எப்போதுமே ஞாயிறு அன்று மெரினாவில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

திரையரங்குகள் மூடல்
இந்நிலையில் அரசு ஊரடங்கை தளர்த்திய போதும், மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தளங்களை திறக்க அனுமதிக்கவில்லை. இதன்படி சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. சுற்றுலா தளங்கள் எல்லாமே சென்னையில் மூடப்பட்டுள்ளது.

திருப்பி அனுப்பிய போலீஸ்
ஊரடங்கு இன்று இல்லை என்பதால் பேருந்துகளிலும், வாகனங்களிலும் மெரினா கடற்கரைக்கு பலரும் இன்று இரவு ஆசையோடு குவிந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள், சோகத்துடன் வீடு திரும்பினர்.

போலீசார் அதிர்ச்சி
இதனிடையே சிலர் மெரினா கடற்கரையில் அனுமதி கிடைக்காதால் அருகில் உள்ள பட்டினம்பாக்கம் கடற்கரையில் அதிகம் பேர் குவிந்தனர். மக்கள் அங்கு முககவசத்தை மறந்து, சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக குவிந்து இருந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அங்கிருந்த மக்களை வெளியேறுமாறு வலியுறுத்தி, வெளியேற்றி அனுப்பி வைத்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications