ஃபனி.. இன்று அதிதீவிர புயலாக மாறும்.. சென்னையிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா?
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டே வருவதால் தற்போது தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
Recommended Video
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஃபனி புயல் தற்போது எங்கு இருக்கிறது, சென்னையில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முதல்நாள் தாழ்வு மண்டலமாக மாறியது. இது தொடர்ந்து வலுவடைந்து கொண்டே செல்கிறது. இந்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஃபனி புயல் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த புயல் தமிழகத்தை தாக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. பெரும்பாலும் சென்னைக்கு அருகில் இந்த புயல் கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் என்ன
ஆனால் இந்த புயல் வலுவடைய வலுவடைய கொஞ்சம் கொஞ்சமாக திசை மாறி வருகிறது. அதன்படி ஏப்ரல் 30 ம் தேதி வரை இது வடமேற்கு திசையில் நகர உள்ளதாக கூறப்பட்டது. அதாவது ஏப்ரல் 30 வரை மட்டுமே இந்த புயல் சென்னையை நோக்கி நகரும்.

ஏன் ஆகும்
அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வட கிழக்கு திசையில் திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னைக்கு இந்த புயலால் பாதிப்பு இல்லை. இந்த புயல் தமிழகத்தில் இருந்து சுமார் 200 கிமீ அருகில் வரை வரும். அதன்பின் திசை மாறி சென்றுவிடும்.

எங்கு உள்ளது
ஃபனி புயல் நேற்று வரை சென்னையில் இருந்து 1350 கிமீ தூரத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்த புயல் சென்னையில் இருந்து 1050 கிமீ தூரத்தில் உள்ளது. இந்த புயல் மிக மிக மெதுவாக நகர்ந்து வருகிறது. சமயங்களில் 40 கிமீ வேகத்திற்கும் குறைவாக கூட இந்த புயல் நகர்ந்து வருகிறது.

எப்படி மாறும்
இந்த புயல் இன்று மாலைக்குள் வேகம் எடுக்கும். இன்று அது தீவிர புயலாகவும், அதன் பின்னர் அதிதீவிர புயலாகவும் மாற உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications