கஜா கால வாறிடுச்சே.. ஒரே புழுக்கமா இருக்கு.. திடீருன்னு வெயிலும் அடிக்குது.. சென்னை நிலை இதுதான்
Recommended Video

சென்னை: கஜா புயல் காரணமாக சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், அவ்வப்போது வெயிலும் அடிக்கிறது.
வங்கக்கடலில் உருவாக்கிய கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு பாம்பன் மற்றும் கடலூர் நடுவே நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 6.30 மணி நிலவரப்படி, வங்கக் கடலில் சென்னைக்கு கிழக்கே 380 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நிலை கொண்டிருந்தது. இதன் தாக்கம் காரணமாக இன்று அதிகாலை முதலே சென்னையில் விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.

காலை மழை
காலை 7 மணி அளவில் கோயம்பேடு, போரூர், பெரம்பூர், திருவான்மியூர், கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. காலை 9 மணி நிலவரப்படி, கிழக்கு கடற்கரை சாலை, அடையாறு, ஈக்காடுந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. வானம் மேக மூட்டத்தோடு இருந்தது.

காலை அவதி
இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்வோர் அலுவலகம் செல்வோர் அவதிப்பட்டனர். புயல் மற்றும் மழை காரணமாக சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பாக இன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புழுக்கம்
ஆனால், காலை 11 மணி நிலவரப்படி நகரின் பல பகுதிகளிலும் புழுக்கம் நிலவியது. வெயிலும் மாறி மாறி அடிக்கிறது. இதனால் சென்னைக்கு போதிய மழை கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.

6 மாவட்டங்களில் விடுமுறை
கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மாவட்டம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை












Click it and Unblock the Notifications