நவ.25- இல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும்- சென்னை வானிலை மையம்
சென்னை: நவம்பர் 25-ஆம் தேதி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 23ஆம் தேதி உருவாகும் என அறிவித்த நிலையில் அது நேற்றே உருவானது. இதன் பாதையை வானிலை மையம் கணித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில் நவம்பர் 25-ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

நவம்பர் 25
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது சென்னை- காரைக்கால் நிலை கொண்டிருக்கிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். வடமேற்கு திசை நோக்கி நகர்கிறது.

கனமழை
இதையடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும். இதையடுத்து வரும் நவம்பர் 25-ஆம் தேதி பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும். அப்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுவை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழையை கொடுக்கும்.

தீவிர புயல்
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நாளை முதல் தமிழகத்தில் கனமழை பெய்யும். இந்த புயல் தீவிர புயலாக மாறுமா அல்லது வெறும் புயலாகவே கரையை கடக்குமா என்பது இன்னும் தெரியவில்லை. எனவே மீணவர்கள் இன்று முதலே கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்
முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவிட்டதால் கனமழை பெய்யும் என தெரிகிறது. அது போல் தமிழகத்திற்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எந்தவித புயலும் ஏற்படாத நிலையில் இந்த ஆண்டு புயல் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications