அதிதீவிர நிவர் புயல் புதுச்சேரி- மரக்காணம் இடையே அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்து வலுவிழந்தது!
சென்னை: சென்னை: வங்க கடலில் உருவான அதிதீவிர நிவர் புயல் புதுச்சேரி- மரக்காணம் இடையே மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வீசும் காற்றுடன் இரவு 10 மணி.30 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.30 மணிக்கு வலுகுறைந்த புயலாக கரையை கடந்தது.
அதிதீவிர நிவர் புயலானது முதலில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்- செய்யூர் அருகே அலம்பரை என்ற கிராமத்தின் அருகே கரையை கடக்கும். என கூறப்பட்டது. இந்த நிலையில் இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே கரையை கடக்க தொடங்கி அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது.

மரக்காணத்தில்
புயல் கரையை கடக்கும் போது மரக்காணத்தில் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தகவல்கள் தெரிவித்தன. இதையடுத்து காற்றின் அழுத்தம் குறைவாக இருந்ததால் புதுவை அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டது.

விழுப்புரம்
எனினும் புயல் சரியாக எங்கே கரையை கடக்கும் என்பது அது நெருங்கும் போதுதான் தெரியும் என கூறினார்கள். இரவுக்கு மேல் கரையை கடக்கும் என சொல்லப்பட்டது. புயல் கரையை கடந்து 6 மணி நேரம் வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றது வானிலை மையம்.

மீனவர்கள்
மரக்காணத்தில் பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு மீன்பிடி படகுகளை நிறுத்த இடம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். கரைகளுக்கு வெளியே படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் காற்றின் காரணமாக படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் ஏற்படும் என மீனவர்கள் அஞ்சுகிறார்கள்.

காரைக்கால்- மாமல்லபுரம்
புயல் கரையை நெருங்க நெருங்க கடலூர், விழுப்புரம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சூறைக்காற்றும் வீசியது. பெரும்பாலான இடங்களில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே உள்ள நிலப்பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

அதிகாலையில் கரையை கடந்தது
புதுவை அருகே நிவர் புயல் கரையை இரவு 10.30 முதல் 11.30மணிக்குள் கரையை கடக்க தொடங்கியது. பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் கரையை கடந்து வலுவிழந்த புயலாக மாறியது நிவர். வடமேற்கு திசையில் ஆரணி, வேலூர் நோக்கி வலுவிழந்த நிலையில் சென்றது நிவர் புயல்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications