காக்கிநாடா அருகே பேய்ட்டி புயல் கரையைக் கடக்கும்.. வானிலை மையம்
Recommended Video

சென்னை: ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே டிசம்பர் 17ம் தேதி பிற்பகலில் பேய்ட்டி புயல் கரையை கடக்கும் என்பதால் அது வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், பேய்ட்டி புயலாக வலுப்பெற்று ஆந்திரா காக்கிநாடா இடையில் டிசம்பர் 17-ம் தேதி பிற்பகலில் கரையை கடக்கிறது.

இந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை மைய இயக்குநர், 17ம் தேதி வரை ஆகிய தேதிகளில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு சென்று சுமார் 690 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது.
24 மணி நேரத்தில் இது சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இதன் வேகம் மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று ஆந்திரா, காக்கிநாடா இடையில் டிசம்பர் 17ம் தேதி பிற்பகலில் கரையை கடக்க கூடும்.
அதன் காரணமாக டிசம்பர் 15 16 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ஒருசில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் அவ்வப்போது வீசக்கூடும். மீனவர்கள் டிசம்பர் 17ம் தேதி ளில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையை பொருத்தவரை இன்று லேசான மழையும் நாளை மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார்.
சென்னையில் பலத்த காற்று
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. புயல் எதிரொலியாக காசிமேடு பகுதியில் மீன்வளத்துறை சார்பில் புயல் எச்சரிக்கை மையம் திறக்கப் பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications