புழல் எனக்கு நிழல்..வெயிலில் குடை, தாகத்திற்கு நீர், நோய்க்கு மருந்து..டி ஜெயக்குமார் எழுதிய "கவிதை"!
சென்னை: திருச்சியில் தங்கி கையெழுத்திட வந்த முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் திருச்சி அதிமுகவினருக்கு நன்றி கூறியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மணலிலே கோட்டை கட்டி விளையாடும் வடசென்னையில் பிறந்த நான், இன்று மலைக்கோட்டை மாநகரில் நின்று பேசுகிறேன். நான் ஏன் இங்கு வந்தேன்? இங்கு என்ன கிடைத்தது? நடந்ததை நாடறியும், ஆனாலும் நினைவூட்டுகிறேன்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வடசென்னையில் ஒரு வாக்குச் சாவடியைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவரை நான் கையும் களவுமாக பிடித்து கொடுத்ததற்கு இந்த திமுக அரசு தந்த பரிசு சிறைவாசம். இம் என்றால் சிறைவாசம்- ஏன் என்றால் வனவாசம் என்றார்கள். ஆனாலும் அஞ்சவில்லை, புழல் எனக்கு நிழலாகத் தான் பட்டது.

சட்ட போராட்டங்கள்
சட்டப் போராட்டங்கள் நடத்திய பின்னர் நீதிமன்றம் தந்த பரிசு, திருச்சியில் தங்கியிருந்து கையெழுத்திட வேண்டும் என்று. ஆஹா எப்பேர்ப்பட்ட பரிசு என இங்கு வந்த பின்தான் நான் உணர்ந்து கொண்டேன். மலைக்கோட்டை நகரில் வந்திறங்கிய நாள் முதல் என் மீது நீங்கள் காட்டிய அன்பும், வாஞ்சையும் அளவிட முடியாதது.

அன்பு அரவணைப்பு
விருந்து உபசரிப்பாலும் அன்பு அரவணைப்பாலும் என்னை திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள். வெயிலில் குடையாகவும் தாகத்திற்கு நீராகவும் நோய்க்கு மருந்தாகவும் இருந்தது உங்கள் பாசப்பிணைப்பு. ஒட்டுமொத்த திருச்சி மாவட்டமும் திரண்டு வந்து கவனித்துக் கொண்டது என்னை, அறுசுவையை தாண்டியது உங்கள் அன்புச் சுவை.

தென் மாவட்டங்கள்
போதாக்குறைக்கு தென் மாவட்டங்களிலும் இருந்து புறப்பட்டு வந்து திருச்சி மாநகரை திருவிழாவாக மாற்றி விட்டீர்கள். இங்கு தங்கியிருந்த இந்த இரண்டு வாரமும் வரம்பெற்ற வாரங்கள். என் நினைவில் பொன்னெழுத்துக்களால் நிறைந்துவிட்டது திருச்சி மாநகரம்.

ரத்தத்தின் ரத்தங்களே
நிபந்தனையாகத் தான் திருச்சியில் தங்க வேண்டியிருந்தது. ஆனால் இன்றோ புறப்படவே மனமில்லை. என் இரண்டாம் தாய்வீடாக மாறிவிட்ட இந்த திருச்சி மண்ணையும் உங்கள் அன்பையும் நினைத்து விம்மிய நெஞ்சோடு விடை கொடுக்கிறேன். போய் வருகிறேன் மலைக்கோட்டை மாநகரே! மலைக்கோட்டையில் கழக் கொடியை பறக்க விடும் ரத்தத்தின் ரத்தங்களே... நன்றி இவ்வாறு டி ஜெயக்குமார் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
NDA Meeting Trichy LIVE: மத்திய அரசு திட்டங்களை திமுக அரசு தாமதப்படுத்துகிறது - மோடி -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
ஊழல் பணம் எல்லாம் ஒரே குடும்பத்துக்கு போகிறது.. திருச்சியில் திமுகவை அட்டாக் செய்த மோடி! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்!












Click it and Unblock the Notifications