புழல் எனக்கு நிழல்..வெயிலில் குடை, தாகத்திற்கு நீர், நோய்க்கு மருந்து..டி ஜெயக்குமார் எழுதிய "கவிதை"!
சென்னை: திருச்சியில் தங்கி கையெழுத்திட வந்த முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் திருச்சி அதிமுகவினருக்கு நன்றி கூறியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மணலிலே கோட்டை கட்டி விளையாடும் வடசென்னையில் பிறந்த நான், இன்று மலைக்கோட்டை மாநகரில் நின்று பேசுகிறேன். நான் ஏன் இங்கு வந்தேன்? இங்கு என்ன கிடைத்தது? நடந்ததை நாடறியும், ஆனாலும் நினைவூட்டுகிறேன்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வடசென்னையில் ஒரு வாக்குச் சாவடியைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவரை நான் கையும் களவுமாக பிடித்து கொடுத்ததற்கு இந்த திமுக அரசு தந்த பரிசு சிறைவாசம். இம் என்றால் சிறைவாசம்- ஏன் என்றால் வனவாசம் என்றார்கள். ஆனாலும் அஞ்சவில்லை, புழல் எனக்கு நிழலாகத் தான் பட்டது.

சட்ட போராட்டங்கள்
சட்டப் போராட்டங்கள் நடத்திய பின்னர் நீதிமன்றம் தந்த பரிசு, திருச்சியில் தங்கியிருந்து கையெழுத்திட வேண்டும் என்று. ஆஹா எப்பேர்ப்பட்ட பரிசு என இங்கு வந்த பின்தான் நான் உணர்ந்து கொண்டேன். மலைக்கோட்டை நகரில் வந்திறங்கிய நாள் முதல் என் மீது நீங்கள் காட்டிய அன்பும், வாஞ்சையும் அளவிட முடியாதது.

அன்பு அரவணைப்பு
விருந்து உபசரிப்பாலும் அன்பு அரவணைப்பாலும் என்னை திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள். வெயிலில் குடையாகவும் தாகத்திற்கு நீராகவும் நோய்க்கு மருந்தாகவும் இருந்தது உங்கள் பாசப்பிணைப்பு. ஒட்டுமொத்த திருச்சி மாவட்டமும் திரண்டு வந்து கவனித்துக் கொண்டது என்னை, அறுசுவையை தாண்டியது உங்கள் அன்புச் சுவை.

தென் மாவட்டங்கள்
போதாக்குறைக்கு தென் மாவட்டங்களிலும் இருந்து புறப்பட்டு வந்து திருச்சி மாநகரை திருவிழாவாக மாற்றி விட்டீர்கள். இங்கு தங்கியிருந்த இந்த இரண்டு வாரமும் வரம்பெற்ற வாரங்கள். என் நினைவில் பொன்னெழுத்துக்களால் நிறைந்துவிட்டது திருச்சி மாநகரம்.

ரத்தத்தின் ரத்தங்களே
நிபந்தனையாகத் தான் திருச்சியில் தங்க வேண்டியிருந்தது. ஆனால் இன்றோ புறப்படவே மனமில்லை. என் இரண்டாம் தாய்வீடாக மாறிவிட்ட இந்த திருச்சி மண்ணையும் உங்கள் அன்பையும் நினைத்து விம்மிய நெஞ்சோடு விடை கொடுக்கிறேன். போய் வருகிறேன் மலைக்கோட்டை மாநகரே! மலைக்கோட்டையில் கழக் கொடியை பறக்க விடும் ரத்தத்தின் ரத்தங்களே... நன்றி இவ்வாறு டி ஜெயக்குமார் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர்












Click it and Unblock the Notifications