Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டான்ஸர் ரமேஷ் முதலும் கடைசியுமாக கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா? 2வது மனைவி இன்பவள்ளி கண்ணீர்

நானும் டான்ஸர் ரமேஷும் 20 ஆண்டுகளுக்கு முன்பே காதலித்தோம்- இரண்டாவது மனைவி இன்பவள்ளி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தானும் டான்ஸர் ரமேஷும் 20 ஆண்டுகளுக்கு முன்பே காதலித்து வந்ததாகவும் அவர்தான் தனக்கு உயிர் என்றும் இரண்டாவது மனைவி இன்பவள்ளி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

சென்னை பர்மா பஜாரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது அசாத்திய நடன முறையால் அப்பகுதி இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார். மைக்கேல் ஜாக்சன் போல் தனது நடன திறமையுடன் இருந்தார். அவர் பிரபுதேவா போல் நடனமாடுவார்.

இதை கண்ட அந்தப் பகுதி இளைஞர்கள் ரமேஷை ஆட வைத்து அவரது வீடியோக்களை ரீல்ஸ், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவு செய்தனர். இதனால் இவரது வீடியோக்களை நிறைய பேர் பார்த்து ரசித்தனர். இதன் மூலம் அவர் டான்ஸர் ரமேஷ் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

ஜீ தமிழ் தொலைகாட்சி

ஜீ தமிழ் தொலைகாட்சி

இதைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைகாட்சியிலும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கும் மைக்கேல் ஜாக்சன், பிரபுதேவா போல் நடனமாடி ஜட்ஜ்களை அதிர வைத்தார். இதன் மூலம் டான்ஸர் ரமேஷுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அவர் துணிவு, ஜெயிலர் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

10ஆவது மாடி

10ஆவது மாடி

இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி தனது பிறந்தநாளின் போது அவர் கே.பி பார்க் குடியிருப்பில் 10ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் டான்ஸர் ரமேஷுக்கு இரு மனைவிகள். அதில் முதல் மனைவி பெயர் சித்ரா, இரண்டாவது மனைவி பெயர் இன்பவள்ளி, முதல் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு கடந்த இரு மாதங்களாக இன்பவள்ளியுடன்தான் வசித்து வந்தார். டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதும் இரண்டாவது மனைவியின் வீட்டில்தான்.

மரணத்திற்கு இன்பவள்ளிதான் காரணம்

மரணத்திற்கு இன்பவள்ளிதான் காரணம்

இதனால் தனது கணவரின் மரணத்திற்கு இன்பவள்ளிதான் காரணம் என அவரது முதல் மனைவி சித்ரா போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து டான்ஸர் மரணத்தை சந்தேக மரணமாக போலீஸார் பதிவு செய்தனர். இது தொடர்பாக இன்பவள்ளியிடம் விசாரணையும் நடத்தினர். அப்போது சம்பவ தினத்தன்று குடிக்க காசு கொடுக்காததால் ரமேஷ் 10 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

20 ஆண்டுகளுக்கு முன்பே காதல்

20 ஆண்டுகளுக்கு முன்பே காதல்

இது குறித்து இன்பவள்ளி மேலும் கூறுகையில், நானும் ரமேஷும் 20 ஆண்டுகளுக்கு முன்பே காதலித்து வந்தோம். எனது கணவர் மாரடைப்பால் இறந்ததும் ரமேஷ்தான் எனக்கும் எனது 3 மகள்களுக்கும் பாதுகாப்பாக இருந்தார், அவரால் எங்களுக்கு எந்த வருமானமும் வரவில்லை என்றாலும், பாதுகாப்புக்காக எங்களுடன் வைத்திருந்தோம். அவருக்கு தினமும் நான்தான் சாப்பாடு போடுவேன்.

பண ஆதாயம்

பண ஆதாயம்

ரமேஷால் எனக்கு பண ஆதாயம் ஏதும் கிடையாது. அவரது முதல் மனைவி சித்ரா அவர் படத்தில் நடித்ததால்தான் அவரை தன்னுடன் வைத்துக் கொள்ள முயற்சித்தார். மற்றபடி ரமேஷ் எங்களுடன்தான் இருந்தார், எனக்கு அவர் என்றால் உயிர், இனி ரமேஷ் இல்லாமல் நான் எப்படி வாழ போகிறேன் என தெரியவில்லை. அவர் போனதும் நானும் இறந்திருப்பேன். ஆனால் என்னை நம்பி 3 மகள்கள் இருக்கிறார்கள். நானும் போய்விட்டால் அவர்களை யார் பார்த்துக் கொள்வது, அந்த காரணத்திற்காகத்தான் நான் உயிருடன் இருக்கிறேன். கடைசியாக துணிவு படத்தில் அவர் நடித்ததற்காக ரூ 7 ஆயிரம் தந்தார்கள். அதை ரமேஷ் என்னிடம் தந்தார். இத்தனை ஆண்டுகளில் அவர் கொடுத்த ஒரே பணம் அந்த ரூ 7000 தான். மற்றபடி நான்தான் அவருக்கு பணம் கொடுத்துள்ளேன். அவரது முதல் தாரத்து மகளின் சடங்கிற்கும் நான்தான் ரமேஷுக்கு பணம் கொடுத்தேன் என்றார் இன்பவள்ளி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+