சென்னையில் திடீரென சூழும் கருமேகங்கள்... மழையாகுமா? எதிர்பார்ப்பில் மக்கள்
Recommended Video
சென்னை: சென்னையில் பிற்பகலுக்குப் பிறகு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வருவதால் மக்கள் மழை வருமா என்று மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சென்னை மாநகர் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. பருவ மழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

டேங்கர்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒடிசாவை தாக்கிய ஃபனி புயல் காற்றின் ஈரத்தை உறிஞ்சியதால் சென்னையில் கடந்த 4 நாட்களாக அனல் காற்று வீசி வருகிறது.
வானம் அவ்வப்போது மேகமூட்டமாக காணப்பட்டாலும் புழுக்கம் குறையாமல் உள்ளது. இதனால் எப்போது மழை வரும் என காத்திருக்கின்றனர் சென்னை வாசிகள்.
இந்நிலையில் இன்று பிற்பகலுக்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென கருமேகம் சூழ்ந்து வானிலை சட்டென மாறியுள்ளது. இதனால் மழை வருமா என மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் மக்கள்.












Click it and Unblock the Notifications