பண்ண முடியாதுன்னு சொன்னாங்க.. தமிழில் உருகிய உத்தப்பா.. போட்டிக்கு முன் தோனி எடுத்த முடிவு- பின்னணி
சென்னை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வென்ற பின் மூத்த வீரர் உத்தப்பா கொடுத்த பேட்டி பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
டெல்லிக்கு எதிரான ஐபிஎல் ப்ளே ஆப் ஆட்டத்தில் வென்று 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே பைனல் சென்றுள்ளது. நேற்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி 172 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே எளிதாக 173 ரன்கள் எடுத்து வென்றது.
லீக் போட்டிகளில் சிஎஸ்கே தொடர்ந்து 4 முறை டெல்லியிடம் வீழ்ந்தது. ஆனால் நேற்று பெங்களூரை வீழ்த்தி சிஎஸ்கே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ரெய்னா
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் ரெய்னா ஆட கூடிய நிலையில்தான் இருந்தார். காயத்தில் இருந்து நேற்று காலைதான் அவர் முழுமையாக குணமடைந்தார். சிஎஸ்கே நினைத்திருந்தால் அவரை எடுத்து இருக்கலாம். ஆனால் கேப்டன் தோனி ரெய்னாவை வைத்து ரிஸ்க் எடுக்காமல் மேலும் ஒருமுறை உத்தப்பாவிற்கு வாய்ப்பு கொடுத்தார். உத்தப்பாவிற்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார்.

உத்தப்பா
ரெய்னாவும் ஆடுவதற்கு தயாராக இருந்த நிலையில் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் உத்தப்பாவிற்கு மீண்டும் வாய்ப்பு தரும் முடிவையே எடுத்துள்ளனர். உத்தப்பா கடந்த 4 சீசனாகவே பெரிதாக ஆடவில்லை. சிஎஸ்கேவிற்காக ஆடிய முதல் இரண்டு போட்டியிலும் பெரிதாக நம்பிக்கை தரவில்லை. ஆனாலும் உத்தப்பாவை தூக்கி வீசாமல் மூன்றாவதாக அவருக்கு ஒரு போட்டியில் வாய்ப்பு கொடுத்து களமிறக்கினார் தோனி.

சிஎஸ்கே அணி
தோனி வைத்த இந்த நம்பிக்கைதான் உத்தப்பா சிஎஸ்கே அணியில் நேற்று அதிரடியாக ஆடி உத்தப்பா 44 பந்தில் 63 ரன்கள் எடுக்க காரணமாக இருந்தது. இதில் இரண்டு சிக்ஸ் அடக்கம். உத்தப்பாவை பலரும் வேண்டும் என்று சொன்ன போது தோனி மட்டும் உத்தப்பாவை ப்ளே ஆப் நேரத்தில் முழுமையாக நம்பி வாய்ப்பு கொடுத்தார். சையது முஷ்டாக் கோப்பை தொடரில் உத்தப்பா சிறப்பாக ஆடினார்.

சையது முஷ்டாக் தொடர்
சையது முஷ்டாக் தொடரில் சதம் உட்பட வரிசையாக ஒவ்வொரு போட்டியிலும் கேரளா அணிக்காக அதிரடியாக ஆடி முழு பார்மோடுதான் உத்தப்பா சிஎஸ்கேவிற்கு வந்தார். 1000 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற கனவோடு வந்தவருக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனாலும் 1000 ரன்களுக்கு இணையான ஒரு அரை சதத்தை முக்கியமான கட்டத்தில் அடித்து நேற்று சிஎஸ்கே அணியை ப்ளே ஆப் கொண்டு செல்ல உதவினார்.

உத்தப்பா தமிழ்
நேற்று போட்டிக்கு பின் கூட தன்னை பற்றி பெரிதாக பேசாமல் தோனியை பற்றி அழகான தமிழில் பேசி உத்தப்பா தமிழ் மக்களை கவர்ந்தார். கர்நாடகாவில் பிறந்தவர் என்றாலும் கேரளா பார்டர் என்பதால் தமிழ், மலையாளம், கன்னடம் என்று பல திராவிட மொழிகள் இவருக்கு அத்துப்படி. நேற்று தமிழில் பேசிய உத்தப்பா, வெளியில் பார்க்கும் போது தோனியை பார்த்து பலரும் கஷ்டப்பட்டனர்.

பண்ண முடியாது
தோனியை எல்லோரும் குறைவாக மதிப்பிட்டனர். அவரால் ஆட முடியாது என்றனர். அவர் பீக்கில் இல்லை. அவரால் ஆட முடியாது என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் தோனி சிஎஸ்கே அணிக்கு தேவைப்படும் போது வந்து சரியாக ஆடிக்கொடுத்து இருக்கிறார். பண்ண முடியாதுன்னு சொன்னாங்க. ஆனால் தோனி செய்து காட்டி இருக்கிறார். அவர் மீது நாங்கள் நம்பிக்கை வைத்து இருந்தோம். அதை தோனி நிரூபித்துள்ளார், என்று உத்தப்பா தமிழில் குறிப்பிட்டார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications