காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் - 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும், தமிழகத்தில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மன்னார் வளைகுடா பகுதியில் 30 மணி நேரத்திற்கும் மேலாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. மேலும், சில மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அங்கே நிலை கொண்டு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் பயிரடப்பட்ட நெற்பயிர்கள் முற்றிலும் மூழ்கியுள்ளளன.
கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குள்ளஞ்சாவடி அருகேயுள்ள பெருமாள் ஏரியில் இருந்து நேற்று 12,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 19,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கொளக்குடி, ஓணான்குப்பம், சிறுபாலையூர், அகரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளநீர் சூழ்ந்து தத்தளிக்கின்றன.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இரண்டு நாட்களாக மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் கனமழை தொடரும். இதனையடுத்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications