Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர்கிட்ட சொல்லுங்க.. எடப்பாடி வைத்த கோரிக்கை.. டெல்லி சொன்ன நெகட்டிவ் பதில்.. ஆ போச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்பிய எடப்பாடியை இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சந்தித்தனர். இதில் பல்வேறு முக்கியமான விஷயங்களை அவர்கள் ஆலோசனை செய்துள்ளனர்.

டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டத்தில் பிரதமர் மோடி அருகிலேயே எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அமர்ந்து இருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு தேசிய அளவில் கொடுக்கப்பட்ட இந்த முக்கியத்துவம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கியமான சில விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக தமிழ்நாட்டில் அதிக இடங்களை வெல்ல வேண்டும் என்று இந்த கூட்டத்தில் பேசி உள்ளனர்.

Did BJP give a negative reply to Edappadi Palanisamy and AIADMK after NDA meeting?

முதலில் அரசல் புரசலாக அதிமுக வலிமை பற்றி எடப்பாடி காதுபட மற்ற கட்சிகள் பேசிக்கொண்டு இருந்தன. இந்த நிலையில்தான் கூட்டத்தின் போது வெளிப்படையாக 2024 தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெறும் மிக முக்கியமானது. அந்த வெற்றி என்டிஏ கூட்டணிக்கு முக்கியமானதாக இருக்கும். இதனால் தமிழ்நாட்டில் அதிமுக தேர்தலுக்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று பேசியதாக கூறப்படுகிறது.

சென்னை மீட்டிங்: தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்பிய எடப்பாடியை இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது, டெல்லியில் நடந்த விவாதங்களை பகிர்ந்து கொண்டார் எடப்பாடி. குறிப்பாக, கூட்டம் முடிந்ததும், எடப்பாடி தங்கியிருந்த அறைக்கு ஜே.பி.நட்டாவும், அமைச்சர் பியூஸ்கோயலும் வந்துள்ளனர்.

மோடியை தனிப்பட்ட முறையில் சந்திக்க எடப்பாடி நேரம் கேட்டும் நேரமின்மையால் ஒதுக்கப்படவில்லை. இதனையடுத்து, ஜே.பி.நட்டாவை சந்தியுங்கள் என்று அவருக்கு சொல்லப்பட்டது. அந்த வகையில்தான் பியூஸ்கோயலுடன் சென்று எடப்பாடியை சந்தித்துள்ளார் ஜே.பி.நட்டா. இதனை சீனியர்களிடம் பகிர்ந்துகொண்ட எடப்பாடி.

நம்முடைய முன்னாள் மந்திரிகளுக்கு எதிராக நீதிமன்ற விசாரணையை தொடங்குவதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற திமுகவின் அரசியலை குறித்து நட்டாவிடம் சுட்டிக்காட்டி, அப்படி எந்த ஒப்புதலும் கவர்னர் கொடுத்துவிடக் கூடாது என கவர்னருக்கு ஒரு அட்வைஸை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

ஆனா அவர்களோ, நிர்வாக ரீதியிலாக, சட்ட ரீதியிலாக தமிழ்நாடு அரசு எடுக்கும் எந்த ஒரு விசயத்திலும் மத்திய அரசு தலையிடாது. சட்ட பிரச்சனைகளை நீங்கள்தான் சரி செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லி நமது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர் என சொல்லியிருக்கிறார் எடப்பாடி. இது, சீனியர் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது.

தொடர்ந்து நடந்த ஆலோசனையில், ''பாஜகவுடன் தேர்தல் கூட்டணி நீடிக்கும். ஆனால், தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை. இதில் மாற்றம் இருந்தால் அதனை நாங்கள் ஏற்க முடியாது. அதேபோல, கூட்டணிக்குள் ஓபிஎஸ்சையும் தினகரனையும் சேர்த்துக்கொள்ள வற்புறுத்தக்கூடாது. வற்புறுத்தினால் பாஜகவுடன் கூட்டணி நீடிக்குமா என நான் சொல்ல முடியாது.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி (அதிமுக-பாஜக கூட்டணி) நீடிக்கும் நிலையில், ஓபிஎஸ்-தினகரனுடன் தனியாக ஒரு கூட்டணியை பாஜக அமைத்தாலும் அதனையும் நாங்கள் ஏற்பது கடினம்'' என்றும் பியூஸ் கோயலிடமும் நட்டாவிடமும் சொல்லிவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி. இந்த முடிவை எடுத்ததில் எடப்பாடியை பாராட்டியிருக்கிறார்கள் மூத்த நிர்வாகிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+