ஸ்டாலின் போல் எடப்பாடி சைக்கிள் ஓட்டுவாரா? பதவி விலகத்தயார்! திமுக எம்.எல்.ஏவின் விபரீத சவால்
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போல் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியால் சைக்கிள் ஓட்ட முடியுமா? என திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சங்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருவொற்றியூர் அஜாக்ஸ் பகுதியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் விழா நடைபெற்றது. இதில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பங்கேற்ற திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் தொண்டர்கள் முன்பாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் "நேற்று இதே இடத்தில் தண்ணீர் பந்தல் திறந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியுள்ளார். முதலமைச்சர் உடற்பயிற்சி செய்வதையும், சைக்கிள் ஓட்டுவதையும் வைத்து தரக்குறைவாக விமர்சனம் செய்த குப்பனை கண்டிக்கிறேன். ஒரு நாளைக்கு 10 கீலோ மீட்டர் வரை சைக்கிள் ஓட்டும் முதலமைச்சர் ஸ்டாலினை போல எடப்பாடியால் சைக்கிள் ஓட்ட முடியுமா?

10 கிலோ மீட்டர் அல்ல 4 கிலோ மீட்டர் வரை குப்பன் சைக்கிள் ஓட்டினால் நான் பதவி விலகிக் கொள்கிறேன். மேலும் திருவொற்றியூர் 7வது வார்டில் குப்பனின் மகன் கார்த்திக் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடாக வெற்றிபெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் இருக்கும் வரை திருவொற்றியூரில் குப்பனால் வெற்றிபெற முடியாது.












Click it and Unblock the Notifications