துருப்பு சீட்டே "இவர்தான்".. அவரை கைகாட்டினாராமே செந்தில் பாலாஜி.. சீக்ரெட்டை சொன்ன புள்ளி.. போச்சு?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அவர் கைது செய்யப்படவோ அல்லது காவலில் வைக்கப்படவோ இல்லை என்று அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்ற நிலையில் 3000 பக்க விசாரணை அறிக்கையை ட்ரங்க் பெட்டி ஒன்றில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான பல்வேறு முக்கிய விவரங்கள் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் விசாரணையில் கூறிய விஷயங்கள் கூற மறுத்த விஷயங்கள் ஆகியவை எல்லாம் மொத்தமாக டைப் செய்யப்பட்டு அதன் முடிவுகளும் விவரிக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார்: இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பிய அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. அசோக்கிற்கு 3-வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனின் கெடு 27-ந்தேதி முடிவடைந்தது. அதற்குள் அமலாக்கத்துறையின் இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அவர் ஆஜராக வேண்டும். 27-ந்தேதி வரை தான் அவருக்கு கடைசி கெடு ஆனால் அவர் ஆஜராகவில்லை.
அன்றைய தினம் அவர் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தால், அவரை தலைமறைவு குற்றவாளியாகவும், தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அறிவிக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறதாம். 27-ந்தேதி ஆஜராகச் சொல்லி அனுப்பப்பட்ட சம்மனுக்கு, இதய நோய் சிகிச்சையில் நான் இருந்து வருவதாலும், அந்த சிகிச்சை முடிய சில மாதங்கள் ஆகுமென்பதாலும் நேரில் ஆஜராக 6 மாத கால அவகாசம் தர வேண்டும் என கடிதம் மூலமாக கோரிக்கை வைத்தார் அசோக். இந்த நிலையில்தான் அசோக் குமார் கைது செய்யப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வந்தன.
மறுப்பு: ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், செந்தில் பாலாஜி தம்பியை அமலாக்கத்துறை கைது செய்யவில்லை. இதில் மீடியா ஏமாந்துவிட்டது. அசோக் குமாரை கேரளாவில் கைது செய்துவிட்டதாக மீடியா சொன்னது. அதிமுகவில் சிலர் சொல்லித்தான் இந்த விஷயத்தை வெளியிட்டனர்.
ஆனால் யாருமே இந்த விவகாரத்தில் செய்தியை உறுதிப்படுத்தவில்லை. அமலாக்கத்துறை இதை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனாலும் உறுதி செய்யாமல் இவர்கள் செய்தி வெளியிட்டனர். இது கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. இப்போது அமலாக்கத்துறை இதை மறுத்து உள்ளது. இதுவரை அசோக் செந்தில் பாலாஜியை பார்க்காமல் இருக்கிறார்.
அசோக் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. ரெய்டின் தொடக்கத்தில் இருந்தே அசோக் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் வீட்டில் பல முறை ரெய்டு நடத்தியும் கூட அசோக் ஆஜராகவில்லை. அசோக் பிடிபட்டால்தான் செந்தில் பாலாஜிக்கு அழுத்தம் குறையும். ஆனால் அசோக் ஆஜராகவில்லை.
அமலாக்கத்துறை இதில் பிடிவாரண்ட் போடலாம். சிபிஐ பிடிவாரண்ட் போட சொல்லலாம். ஆனால் அசோக் எங்கே? இந்த வழக்கில் துருப்புசீட்டு அசோக்தான். இது சின்ன கேஸ். வெறும் ஒன்றரை லட்சம் மதிப்பிலான கேஸ். இதை செந்தில் பாலாஜி, திமுக சரியாக கையாண்டு இருக்கலாம்., இது திமுகவிற்கு தற்போது கொதிப்பை, ஏமாற்றத்தை, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி அசோக்கை நம்பினார். அசோக்கை அவர் கைகாட்டி இருப்பார் என்று சிலர் சொல்கிறார்கள். செந்தில் பாலாஜி அப்படி சொல்லி இருக்க வாய்ப்பு இல்லை. செந்தில் பாலாஜி எனக்கும் இந்த வழக்கிற்கும், என் தம்பிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று கூறி இருக்கலாம். தம்பியை கைகாட்டிவிட்டு செந்தில் பாலாஜி தப்பிப்பாரா என்பது சந்தேகம். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை, என்று பத்திகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
பெருந்துறை இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? பாஜகவில் செல்வாக்கை நிரூபிக்க ஆசிட் டெஸ்ட்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications