Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பயில்வான்".. மேலே இருக்கவன் பார்த்துப்பான்.. யோசித்த செந்தில் பாலாஜி.. திமுக கொதிக்குதாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் தனது தம்பி அசோக் மூலம் வரும் அபாயத்தை செந்தில் பாலாஜி உணரவில்லை. செந்தில் பாலாஜியின் வேகம், அலட்சியம் இல்லை என்றால் இப்படி நடந்து இருக்காது, என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கூறியுள்ளார்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 14 தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கதுறையால் கைது செய்யபட்டார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் திங்கள் கிழமை அன்று செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12 தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கதுறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் அனுமதியை தொடர்ந்து கடந்த 7 தேதி இரவு முதல் அமலாக்க துறை தன்னுடைய காவலில் எடுத்து விசாரித்தது. 5 நாட்களாக அவரிடம் தீவிரமாக கேள்விகள் கேட்கப்பட்டு வந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்ற நிலையில் 3000 பக்க விசாரணை அறிக்கையை ட்ரங்க் பெட்டி ஒன்றில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான பல்வேறு முக்கிய விவரங்கள் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் விசாரணையில் கூறிய விஷயங்கள் கூற மறுத்த விஷயங்கள் ஆகியவை எல்லாம் மொத்தமாக டைப் செய்யப்பட்டு அதன் முடிவுகளும் விவரிக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

Did Senthil Balaji trust his brother Ashok too much in Enforcement Directorate case?

பேட்டி: செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கு குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், செந்தில் பாலாஜி தம்பியை அமலாக்கத்துறை கைது செய்யவில்லை. இதில் மீடியா ஏமாந்துவிட்டது. அசோக் குமாரை கேரளாவில் கைது செய்துவிட்டதாக மீடியா சொன்னது. அதிமுகவில் சிலர் சொல்லித்தான் இந்த விஷயத்தை வெளியிட்டனர். செந்தில் பாலாஜி தனது தம்பி அசோக்கை அதிகம் நம்பி இருந்தார். அவர் எல்லாம் பார்த்துக்கொள்வார் என்று நினைத்தார். அதுதான் பிரச்சனையே.

ஒரு படத்தில் பயில்வான் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான் என்று சொல்வாரே. அப்படித்தான் இங்கேயும் நடந்தது. அசோக் மூலம் வரும் அபாயத்தை செந்தில் பாலாஜி உணரவில்லை. செந்தில் பாலாஜியின் வேகம், அலட்சியம் இல்லை என்றால் இப்படி நடந்து இருக்காது.

Did Senthil Balaji trust his brother Ashok too much in Enforcement Directorate case?

எல்லா விவகாரத்தையும் தம்பி பார்த்துப்பான் என்று செந்தில் பாலாஜி நினைத்தார். ஆனால் அசோக் குமாரையே பார்க்க முடியவில்லையே. தம்பியை செந்தில் பாலாஜி அதிகம் நம்பினார். அவரிடம் பலர் பேசினார்கள். ஆனால் செந்தில் பாலாஜி இதை கேட்கவில்லை.

இந்த வழக்கில் டெல்லி செல்ல வேண்டாம் என்றார்கள். ஆனால் அவர் கேட்கவில்லை. அவருக்கு எதிரான பிடி இறுக்கமாகிக்கொண்டு இருக்கிறது. அசோக் எங்கே? இந்த வழக்கில் துருப்புசீட்டு அசோக்தான். இது சின்ன கேஸ். வெறும் ஒன்றரை லட்சம் மதிப்பிலான கேஸ். இதை செந்தில் பாலாஜி, திமுக சரியாக கையாண்டு இருக்கலாம்., இது திமுகவிற்கு தற்போது கொதிப்பை, ஏமாற்றத்தை, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Did Senthil Balaji trust his brother Ashok too much in Enforcement Directorate case?

2024 லோக்சபா தேர்தல் முடிவு வரும் வரை செந்தில் பாலாஜி சிறையில்தான் இருப்பார். இது அண்ணாமலையே சொன்னது.மே 10 - 15ல் ரிசல்ட் வரும் வரை செந்தில் பாலாஜி வெளியவே வர மாட்டார். அவரை உள்ளேதான் வைத்து இருப்பார்கள். இவரை வெளியேவிட்டால் கொங்கில் செந்தில் பாலாஜி வெறித்தனமாக வேலை செய்வார். அதை விட மாட்டார்கள். அவரை எப்படி வெளியே விடுவார்கள்.

இதுதான் பாஜகவின் கணக்கு. அதிமுகவின் கோரிக்கையும் இதுவாகவே இருக்கும். செந்தில் பாலாஜியை விட்டால் நாம் கொங்கில் தோல்வி அடைவோம் என்று நினைக்கிறார்கள். அதனால் இந்த வழக்கில் அவருக்கு பெயில் கிடைத்தாலும் மீண்டும் வேறு வழக்கில் அவரை கைது செய்வார்கள், என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+