எடப்பாடியின் தகுதி நீக்க வியூகத்தை தவிடு பொடியாக்கும் தினகரன் அண்ட் கோ?
சென்னை: தங்களை தகுதி நீக்கம் ஏன் செய்யக் கூடாது என வரும் நோட்டீஸுக்கு 'ஜக்கையன்’ பாணி பதில் தந்து முதல்வர் எடப்பாடியின் வியூகத்தை தவிடுபொடியாக்க திட்டமிட்டுள்ளனராம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்.
கள்ளக்குறிச்சி பிரபு உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த தகுதி நீக்க வியூகத்தை தவிடுபொடியாக்குவது என தினகரன் தரப்பு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை ஆளுநரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் ஜக்கையனும் ஒருவர்.
திடீரென ஜக்கையன் சபாநாயகரை சந்தித்து, தம்மை தவறாக அழைத்துச் சென்றுவிட்டனர்; அரசுக்குத்தான் எப்போதும் ஆதரவு என ஒரு விளக்கம் கடிதம் கொடுத்தார். இதனால் ஜக்கையன் மீதான தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டது.
இதேபாணியில்தான் தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேரும், நாங்கள் அதிமுகவின் எம்.எல்.ஏக்கள்தான். சட்டசபையில் பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பின் போது அதிமுக அரசைத்தான் ஆதரித்தோம்; நாளையும் ஆதரிப்போம் என்கிற அடிப்படையில் பதில் கடிதம் அனுப்ப இருக்கிறார்களாம்.
இப்படி ஒரு கடிதம் வந்தால் 3 எம்.எல்.ஏக்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போகும். இதனைத்தான் தினகரனும் எம்.எல்.ஏக்களுக்கு அட்வைஸ் செய்துள்ளாராம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications