Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லஞ்சம் வாங்கியதாக தலைமை செயலகத்தில் செய்தி ஒளிபரப்புத்துறை அதிகாரி கைது.. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தி ஒளிபரப்புத் துறையின் கண்காட்சி அதிகாரி ஒருவரை லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வஞ்சம் வாங்குவதும் பெறுவதும் குற்றம் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யவே கூட லஞ்சம் வாங்கி வருகிறார்கள்.

DIPR higher officer arrested while taking Rs 15000 bribery

இதைத் தடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உயர் அதிகாரி ஒருவரை லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை கைது: சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள செய்தி ஒளிபரப்புத் துறையின் (கண்காட்சி) கணக்கு உயர் பிரிவு அதிகாரி அன்பரசன் என்பவர் தான் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ₹15 ஆயிரம் கேட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய நோட்டுகள் அவருக்குத் தரப்பட்டுள்ளது. இதைத் தெரியாமல் அன்பரசன் லஞ்சம் வாங்கிய நிலையில், அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.

பரபரப்பு: அவருடன் இருந்த உதவியாளர் பாலாஜியும் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. லஞ்சம் வாங்கியதாகத் தலைமைச் செயலகத்திலேயே அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே லஞ்ச ஒழிப்புத் துறையும் இந்த கைது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கைது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

அதில், "மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர் புகார் அளித்திருந்தார். அவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கண்காட்சி நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்பாமல், விருதுநகர் கலெக்டர் அலுவலகம் புகார்தாரரிடமே கொடுத்து தமிழக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கு நேரில் செல்லுமாறு கூறியுள்ளனர்.

15 ஆயிரம் லஞ்சம்: சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகை, கண்காட்சிப் பிரிவு அதிகாரி அன்பரசு, இந்தக் கண்காட்சி நடத்த அனுமதி வழங்க ரூ.15,000/- லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்கத் தயாராக இல்லாததால் மாணிக்கவாசகம் சென்னை விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவை அணுகி புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அன்பரசு உத்தரவின் பேரில் அலுவலக உதவியாளர் பாலாஜி, புகார்தாரரிடம் இருந்து ரூ.15,000ஐ லஞ்சமாகப் பெற்றார். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர், அன்பரசின் கையில் இருந்த 3 உறைகளில் இருந்து கணக்கில் வராத ரூ.90,000/- கைப்பற்றப்பட்டது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+