Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்களுமா? அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டதற்காக இளையராஜாவை பாராட்டிய இயக்குநர் சீனு ராமசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தக முன்னுரை ஒன்றில் அம்பேத்கருடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு பாராட்டி எழுதி இருந்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மோடியை இளையராஜா பாராட்டியதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ட்விட்டரில் இளையராஜாவுக்கு எதிராக ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகின.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், இயக்குநர் மாரி செல்வராஜ் போன்றோர் இளையராஜாவின் கருத்துக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். மறுபக்கம் பாஜகவினர் இளையராஜாவின் கருத்தை பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டு

இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டு

இந்த நிலையில், பிரபல இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் இளையராஜாவின் புத்தக முன்னுரையை பாராட்டி இருக்கிறார். அவர் தனது பதிவில், "பாபாசாகேப் அம்பேத்கரின் ஜெயந்தியை முன்னிட்டு புளூகிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளை 'Ambedkar & Modi - Reformer's Ideas, Performer's Implementation'என்ற புத்தகத்திற்கு சிறப்பான,முன்னுரை எழுதியுள்ளார் பண்ணைப்புரத்து மாமனிதன் இசைஞானி திரு.இளையராஜா அவர்கள். வாழ்த்துகள்." எனக்க் குறிப்பிட்டு இருக்கிறார்.

சீனு ராமசாமியின் மாமனிதன் திரைப்படம்

சீனு ராமசாமியின் மாமனிதன் திரைப்படம்

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து சீனு ராமசாமி இயக்கி இருக்கும் மாமனிதன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் முதல்முறையாக இணைந்து இசையமைத்து இருக்கின்றனர். இதனை பாஜகவை சேர்ந்த நடிகர் ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனம் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 என்ன சொன்னார் இளையராஜா?

என்ன சொன்னார் இளையராஜா?

புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயர் கொண்ட புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்த புத்தகத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார். அதில் அவர், "நதி நீர், பாசனம் தொடர்பான கொள்கை முடிவுகளை அண்ணல் அம்பேத்கர் வகுத்தார் என பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக ஒரு செய்தியை நான் படித்தேன். 2016 ஆம் ஆண்டு முதலீட்டாளர் மாநாட்டில் நதி நீர் மற்றும் பாசனம் குறித்த அமைப்புகள் உருவாக்கப்பட்டதற்கு முக்கிய பங்கேற்றவர் என்பேத்கர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார்.

அம்பேத்கர் - மோடியின் கருத்தும் சிந்தனையும் சந்திக்கும் இடம்

அம்பேத்கர் - மோடியின் கருத்தும் சிந்தனையும் சந்திக்கும் இடம்

அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தை அமல்படுத்துபவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் நாட்டின் வளர்ச்சிப்பாதை, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் அம்பேத்கரின் கருத்தும் சிந்தனையும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயன்று இருக்கிறது.

பாஜக அரசின் திட்டங்களை புகழ்ந்த இளையராஜா

பாஜக அரசின் திட்டங்களை புகழ்ந்த இளையராஜா

"மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறது. இந்தியாவில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு பாதைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியை எடுத்துக் கொண்டால், பல்வேறு சட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்ததன் மூலமாக சமுதாயத்தில் பின் தங்கிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சட்டரீதியாக பாதுகாப்பை வழங்கி இருக்கிறார். வீடுகள் கழிப்பிடங்களை கட்டிக்கொடுத்ததுடன் ஏழைகளின் வாழ்க்கையையும் முன்னேற்றி இருக்கிறார்.

முத்தலாக் சட்டத்துக்கு பாராட்டு

முத்தலாக் சட்டத்துக்கு பாராட்டு

பிரதமர் மோடி அரசு பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்து இருப்பதால் கிராமபுற பெண்கள் படிப்பை தொடர முடியும். இலவச எரிவாயு திட்டம், பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்களே நினைவுக்கு வருகின்றன. குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தாலும் முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தின் மூலமாகவும் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இதனை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார்.

Recommended Video

    Ilayaraja-வுக்கு Yuvan Shankar Raja பதிலடியா? | Modi Ambedkar | Oneindia Tamil
    அம்பேத்கர் மோடிக்கு இருக்கும் ஒற்றுமை

    அம்பேத்கர் மோடிக்கு இருக்கும் ஒற்றுமை

    அம்பேத்கரும், மோடியும் ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள். அதை ஒழிக்க பாடுபட்டவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டனர். இப்படி இருவரும் ஒன்றுபடுவதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டி இருக்கிறது. பிரதமர் மோடியால் கட்டமைக்கப்பட்டு வரும் தற்சார்பு இந்தியா என்பது விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் சரியான அஞ்சலி. இந்த புத்தகம் விடுதலை போராட்ட வீரர்கள் கனவின்படி புதிய இந்தியா எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதை தெரிவிக்கிறது. நம் மண்ணின் சிறந்த மைந்தனின் பெருமையை வெளிக்காட்டுகிறது. இதனை இளைய தலைமுறையினருக்கு நான் பரிந்துரைக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+