Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Madhan bob demise: “நெருங்கியவர்கள் விட்டுட்டு போறதை ஏத்துக்க முடியல" மதன் பாபு மறைவுக்கு கலங்கிய இயக்குநர் சுராஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல குணச்சித்திர நடிகரான மதன் பாபு இன்று உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினரை மட்டுமல்லாது சினிமா ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதன் பாபு மறைவு குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்த இயக்குநர் சுராஜ், "நெருங்கியவர்கள் இப்படி விட்டுட்டு போறத ஏத்துக்க முடியல" என கலங்கியுள்ளார்.

தமிழ் திரையுலகம் பல கலைஞர்களை கொடுத்திருக்கிறது. அதில் ஒரு சிலர்தான் அத்தி பூத்தார் போல மக்கள் மனதில் நிலைத்து நின்றிருக்கிறார்கள். அப்படியானவர்களில் நடிகர் மதன் பாப் எனும் மதன் பாபும் ஒருவர். இவரது சிரிப்புக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சந்திரமுகி படத்தில் சிரித்துக்கொண்டே "10 லட்ச ரூபாய் கார்.. உனக்கு சலுன் கடையா?" என்று கேட்கும் வசனம் டாப் டக்கர்.

madhan bob cinima

"உள்ள என்ன இருக்கு நான் பாக்கனும்?", "இதோ வந்துட்டேன்" போன்ற டயலாக்குகள் இவருக்கு தனி அடையாளத்தையே கொடுத்தது. அதிலும் பிரன்ட்ஸ் படத்தில் இவர் வரும் காட்சிகள் மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தனர். அப்படியான கலைஞனின் உயிரை இன்று புற்றுநோய் பறித்து சென்றிருக்கிறது.

இவரது மறைவு குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்த இயக்குநர் சுராஜ், "என் கூட படிக்காதவன் திரைப்படம் பணியாற்றுகின்றார். மாப்பிள்ளை மற்றும் கத்தி சண்டை என பல திரைப்படங்களில் என்னுடன் அவர் பணியாற்று இருக்கிறார். திரைப்படங்களை தாண்டி எனக்கும் அவருக்குமான நெருக்கம் என்பது ஆழ்ந்த நட்பாக இருந்தது. அவருடைய அடையார் வீட்டிற்கு என்னை அடிக்கடி அழைப்பார். அவருடைய மகள் என்னுடைய திரைப்படத்தில் ஒரு பாடலை கூட பாடி இருக்கிறார். அவருடைய மகள் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஏ ஆர் ரகுமான் உடன் கூட பணியாற்றியிருந்தார்.

மதன் பாபு சன் டிவியில் 'அசத்தப்போவது யாரு' என்கிற நிகழ்ச்சியை நடத்தி இருந்தார். அது மிகவும் ஃபேமஸ் ஆக இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார். மிகவும் நல்ல மனிதர். ஆனால் இன்று அவர் உயிர் பிரிந்திருக்கிறது. அவருக்கு புற்றுநோய் என்று சொல்லி இருக்கிறார்கள். இதுதான் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரித்தே சினிமாவில் ஜெயித்தவர் அவர். அவருக்கும் எனக்குமான நட்பு, 'கிரி' என்றும் திரைப்படத்தில் இருந்துதான் தொடங்கியது. அந்த திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியிருந்தார். அதில் நான் துணை இயக்குனராக பணியாற்றியிருந்தேன். அப்பொழுது மதன் பாப் சிறப்பான தோற்றத்தில் நடித்து அசத்தியிருந்தார். அப்போது முதல் எனக்கும் அவருக்குமான நட்பு தொடங்கியது. பின் நாட்களில் நான் இயக்குனராக வந்த போது எனது திரைப்படங்களில் அவருக்கு என தனி இடம் ஒதுக்கியிருந்தேன்.

இயல்பாகவே அவர் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்ட மனிதர். திரைப்படத்தைக் கடந்து பொதுவாழ்வில் கூட மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார். படப்பிடிப்பு தளங்களில் சக நடிகர்களிடம் மிகவும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் பேசி பழகியவர். நடிப்பு என்பதை தாண்டி அவருக்கு மேஜிக்கில் தனி ஆர்வம் இருந்தது. எங்களிடம் அடிக்கடி அவர் மேஜிக் செய்து காட்டுவார். நெருங்கியவர்கள் எல்லாம் தவறிக் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+