உள்ளாட்சித் தேர்தல்... மாற்றுத்திறனாளிகள் போட்டியிடலாம்... அரசு சட்டத்திருத்தம்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகளும் நகர்ப்புறங்களில் போட்டியிடலாம் என தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அரசாணை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த சட்டத்திருத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிகள் மும்முரம்
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை இம்மாத இறுதியில் மாநில தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக அது தொடர்பான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அரசாணை வெளியீடு
நகர்ப்புறங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற விதி தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தில் இருந்தது. இந்நிலையில் அதில் திருத்தம் செய்யப்பட்டு தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

சம உரிமை
தமிழக அரசின் இந்த நடவடிக்கை மூலம் உள்ளாட்சித் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. அனைவருக்கும் சம உரிமை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போட்டியிடலாம்
தமிழக மொத்த மக்கள் தொகையில் 3 % பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அதில் செவி திறனற்ற, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். இந்நிலையில் மக்கள் பணியில் ஆர்வமிருப்பின் அவர்களும் இனி தேர்தலில் களம் கண்டு கலக்க முடியும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications