எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. ஹைகோர்ட் 3வது நீதிபதி தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
Recommended Video
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும்.. ஹைகோர்ட் 3வது நீதிபதி அதிரடி தீர்ப்பு- வீடியோ
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், ஹைகோர்ட் 3வது நீதிபதி சத்யநாராயணன் இன்று தீர்ப்பு வழங்கினார்.
18 பேரின் தகுதி நீக்கமும் செல்லும் என்று அவர் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உடனடியாக ஆபத்து நீங்கியுள்ளது.
நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்:
- 18 சட்டசபை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும்
- 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடையில்லை
- நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கம்
- எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் சட்டவிரோதம் இல்லை
- இரு நீதிபதிகளின் தீர்ப்பை பரிசீலிக்கவில்லை. நான் விசாரித்ததன் அடிப்படையில் தீர்ப்பு
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். தகுதி நீக்கம் செல்லும் என்பதோடு, இடைத் தேர்தல் நடத்த தடை தளர்த்தப்பட்டுவிட்டது என்பதும் இந்த தீர்ப்பின் முக்கிய அம்சமாகும். ஒரு வகையில் இது தினகரன் தரப்புக்கு வருங்காலத்தில் பலன் அளிக்க கூடியதும் ஆகும்.
Comments
disqualification mla ttv dhinakaran chennai தகுதி நீக்கம் எம்எல்ஏ டிடிவி தினகரன் சென்னை 18 mlas verdict
English summary
What are the major points High court made in TTV Dinakaran faction disqualified MLAs case.