தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. சென்னை முதலிடம்.. ஷாக் கொடுத்த திருச்சி
சென்னை" தமிழகத்தில் புதிதாக 50 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பபட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக கோவையில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரத்தை இப்போது பார்ப்போம்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிவிப்பில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது. இதில் 570 பேர் டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவர். 621 ஆக உயர்ந்துள்ளதால் தொடர்ந்து நாட்டிலயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

திருச்சியில் 13 பேருக்கு
தமிழகத்தில் இன்றைக்கு வெளியான கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளில் மிக அதிகபட்சமாக சென்னையைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருச்சியில் 13 பேருக்கும், திருப்பூரில் 4 பேருக்கும், நாமக்கல், கடலூர், தஞ்சாவூரில் தலா 3 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தலா 2 பேருக்கும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மற்றும் அரியலூரில் ஒருவருக்கும் இன்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

கோவை 2வது இடம்
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதை இப்போது பார்ப்போம். தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக சென்னையில் 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள கோவையில் 59 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. 3வது இடத்தை பிடித்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கும், 4வது இடத்தை திருநெல்வேலி பிடித்துள்ளது. அங்கு 38 பேருக்கும், ஈரோட்டில் 32 பேருக்கும் (5வது இடம்) கொரோனா பாதிப்பு உள்ளது.

நாமக்கல் 28 பேருக்கு பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில்30 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 28 பேருக்கும்,ராணிப்பேட்டையில் 25 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 பேருக்கும், தேனியில் 23 பேருக்கும், கரூரில் 23 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் 19 பேருக்கும், விழுப்புரத்தில் 16 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 13 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் தூத்துக்குடி
சேலம், திருவள்ளூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா 12 பேருக்கும், நாகப்பட்டினம், தூத்துக்குடி, விருதுநகர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா 11 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் 9 பேருக்கும், தஞ்சாவூரில் 8 பேருக்கும், திருப்பூரில் 7 பேருக்கும் கன்னியாகுமரியில் 6 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 6 பேருக்கும் சிவகங்கை, வேலூரில் தலா 5 பேருக்கும், நீலகிரியில் 4 பேருக்கும், கள்ளக்குறிச்சி மற்றும் ராமநாதபுரத்தில் தலா 2 பேருக்கும், அரியலூர் மற்றும் பெரம்பலூரில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications