Chennai Mayor: சென்னை மேயராகிறாரா திவ்யா சத்யராஜ்? உள்ளாட்சி தேர்தல் எப்போது?
சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், வரும் 2027 ஆம் ஆண்டு சென்னை மேயராக போகிறாரா என எல்லோரும் கேட்டு வரும் கேள்விக்கு அவர் சொன்ன பதில் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நடிகர், நடிகைகளின் மகனோ மகளோ அதே திரைத்துறைக்கு வருவதுதான் இயல்பு. டாக்டர் புள்ள டாக்டர், வக்கீல் புள்ள வக்கீல் என்ற கணக்குதான். ஆனால் ஒரு சிலரே அந்த சினிமா வாடை இல்லாமல் வேறு தொழிலில் ஜொலிக்கிறார்கள்.
அந்த வகையில் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் குறித்து சொல்லலாம். சத்யராஜ் மகன் சிபி சத்யராஜ் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு ஏனோ ஒரு திருப்புமுனை இந்த திரைப்படத் துறையில் அமையவில்லை.
திவ்யா சத்யராஜ்
ஆனால் திவ்யா சத்யராஜோ திரைத்துறைக்குள் நுழையாமல் மருத்துவராகிவிட்டார். அதாவது ஊட்டச்சத்து நிபுணர். இவர் மகிழ்மதி எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவை கொடுத்து வருகிறார்.
சமூகம் சார்ந்த பிரச்சினை
அவ்வப்போது சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது அரசியலுக்கும் வந்துவிட்டார். திமுகவில் இணைந்துள்ளார். தந்தை சத்யராஜ், பெரியாரிய கொள்கைகளை கடைபிடித்து வருகிறார். மகள் திராவிட கட்சியில் இணைந்துள்ளார்.
அரசியல் பேட்டி
இந்த நிலையில் அவர் அரசியல் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு அரசியல்வாதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திமுக பெண்களை மதிக்கும் கட்சி. நான் அடுத்த சென்னை மேயராகப் போகிறேனா என நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள்.
தன்னலமின்றி உழைப்பேன்
நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மக்களுக்காக தன்னலமின்றி உழைப்பேன். ஒரு பொது ஊழியராக இருப்பதற்கு உண்மையிலேயே நன்றியுள்ளவளாக உணர்கிறேன் என திவ்யா தெரிவித்துள்ளார்.
தவெக விஜய்
திவ்யா சத்யராஜ், தவெக விஜய்க்கு எதிரான அரசியலை முன்னெடுத்து வருகிறார். திமுக நிகழ்ச்சியில் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிகழ்வில் திவ்யா பேசுகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏசி கேரவனில் சொகுசு விமானத்தில் நண்பர்களின் திருமணத்திற்கு செல்லும் போலி அரசியல்வாதி அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யா அஜித்தா
இந்த நிலையில் அவர் அண்மையில் ஒரு இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவருக்கு விஜய் பிடிக்குமா, அஜித் பிடிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்திருந்தார்.
அஜித் பிடிக்கும்
அவர் கூறுகையில், நான் எப்போதும் சொல்வதைப் போல எனக்கு அஜித் பிடிக்கும். அவர் மிகச் சிறந்த நடிகர். மிக முக்கியமாக அவர் பெண்களை மதிக்கிறார். அவர் ஒரு குடும்பத் தலைவர், தனது வாழ்க்கையில் பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறார். மேலும் அவரது ரசிகர்கள் அவரை போற்றி பின்பற்றுகிறார்கள்.
அஜித் ஏன்
அஜித் ரசிகர்கள் யாரும் சமூகஊடகங்களில் பெண்களை அவமதிப்பதில்லை. அவர்கள் கோழைகளும் அல்ல. கண்ணியத்துடனும் தரத்துடனும் நடந்து கொள்கிறார்கள். அஜித், தனது ரசிகர்கள் ஆன்லைனில் பெண்களை அச்சுறுத்தவோ அல்லது அவமதிக்கவோ அனுமதிக்கவே மாட்டார். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
மேயர் பிரியா
சென்னை மேயராக ஆர்.பிரியா உள்ளார். இவர் மிகவும் இளம் வயது மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயராக தேர்வு செய்யப்பட்டார். பிரியாவின் தந்தையும் திமுகவின் விசுவாசியாவார். கடந்த முறை 2022 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. 5 ஆண்டுகள் பதவிக்காலம் என்றால் 2027 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications