தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா.. ரயிலில் இதை பண்ணிடாதீங்க.. ரூ. 1000 அபராதம்
சென்னை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 20 ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை, பட்டாசு, இனிப்பு வகைகள் விற்பனை என அனைத்துப் பகுதிகளும் களைகட்டத் தொடங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட செல்வார்கள் என்பதால் ரயில்வே காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினர் ரயில் பயணிகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ரயிலில் தடை செய்யப்பட்ட பொருள்களை கொண்டு சென்றால் ரூ. 1000 அபராதமாக விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தொழில், வேலை, கல்வி என பல்வேறு தேவைகளுக்காக வெளியூரில் வசித்து வரும் பல்வேறு மாநில, மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இதனால், பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சிறப்பு, பேருந்துகள், சிறப்பு ரயில்கள் ஆகியவை பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படவுள்ளன.

நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில பொருள்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருள்களான அடுப்புகள், ரசாயனங்கள், பட்டாசுகள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட சில பொருள்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி சமயத்தில் பட்டாசு உள்ளிட்ட பொருள்களை ரயில்களில் பயணிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ரயில்களில் தடை செய்யப்பட்ட, ஆபத்தான பொருள்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குறிய குற்றம். எளிதில் தீப்பற்றும், வெடிக்கக்கூடிய பொருள்களை ரயிலில் எடுத்துச் செல்லாமல் பயணிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில் ரயிலில் பட்டாசு கொண்டு செல்லப்படுவது தொடர்ந்து வருவதால் ரயில்வே நிர்வாகம் சார்பில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ரயிலில்ல பட்டாசு உள்ளிட்ட தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது. ஆனாலும், சிலர் விதிகளை மீறி எடுத்துச் செல்வதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ரயில்களில் தடையை மீறி பட்டாசு கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சென்று முதல் முறையாக பிடிபடுபவர்களுக்கு ரூ. 1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications