பாஜகவை வீழ்த்தி திருப்புமுனையைத் தரட்டும் கர்நாடகா சட்டசபை தேர்தல்: தி.க. வீரமணி நம்பிக்கை
சென்னை: பாஜகவை வீழ்த்தி கர்நாடகா சட்டசபை தேர்தல் திருப்புமுனையைத் தரட்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: கர்நாடகாவில்
224 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியைத் தவிர (ஒன்று விவசாய சங்க வேட்பாளருக்கு விட்டுக் கொடுத்து) காங்கிரஸ் மற்ற எல்லா தொகுதிகளிலும் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. 5 ஆண்டுகளுக்குமுன்பு கருநாடகத்தில் நடைபெற்ற தேர்தலில் கருநாடக மக்கள் பா.ஜ.க.வுக்கோ, அதன் கூட்டணிக்கோ மக்கள் வாக்களித்து ஆட்சி அமைக்க உத்தரவிடவில்லை. கட்சித் தாவல், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கட்சி மாற வைத்த குதிரை பேரங்கள்மூலமே பா.ஜ.க. ஆட்சியை அமைத்தனர். (இது பல மாநிலங்களில் பா.ஜ.க.வினரின் ஆட்சி அமைக்கும் கைதேர்ந்த ''வித்தைகளிலான'' ஜனநாயக சொத்தை அணுகுமுறையாகும்).

எடியூரப்பாவை பா.ஜ.க. முதலமைச்சராக்கி, தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னர் அவரை மாற்றி, பொம்மை பசவராஜ் அவர்கள் (அவரும் கட்சி மாறியவர்தான்) முதலமைச்சராகி கருநாடக மாநிலத்தை ''ஒரு ஹிந்துத்துவா அரசியல் பரிசோதனைக் கூடமாகவே'' அவர் ஆக்கி, சிறுபான்மையினர்களை எந்த அளவுக்கு வெளிப்படையாகவே ஒதுக்கி (ஒரு வேட்பாளர்கூடநிறுத்தப்படவே இல்லை), முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட 4 சதவிகித இட ஒதுக்கீடு கூட தேர்தலுக்குமுன் ரத்து செய்யப்பட்டு, அதை மற்ற சில ஜாதியினருக்கு 2 சதவிகிதம் தலா என்று ஆணையிட்டு, அது உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டு நீடிக்கிறது. அதுபற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களின் பேச்சுகூட 'ஷிuதீ யிuபீவீநீமீ' என்று உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு நேற்று(9.5.2023)கூட பகிரங்கமாகவே கண்டித்திருக்கிறது.
6 நாள்கள் பிரச்சாரம்மூலம் பிரதமர் மோடி வேறு எங்குமில்லாது பல மணிநேர தெருப் பேரணிகளை நடத்தி வாக்கு சேகரித்தார்; அதுபோலவே உள்துறை அமைச்சரும், இதர முக்கிய பா.ஜ.க.வினரும் - இதுவரை அவர்கள் கண்டித்து வந்த தேர்தல் கால இலவசங்கள் காங்கிரஸ் அறிவிப்பு எதிர்ப்புக்கு விடை கொடுத்துவிட்டு, போட்டி போட்டு வீடுதோறும் இலவச பால், எரிவாயு சிலிண்டர் சலுகை போன்ற ஏராளமான பல இலவச அறிவிப்புகளை காங்கிரசுக்குப் போட்டியாக அறிவித்து வாக்கு சேகரிக்க முயன்றுள்ளனர்.
அது எந்த அளவுக்குப் பா.ஜ.க.வுக்குக் கைகொடுக்கும் என்பது 13 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போதுதான் தெரியும்! கருநாடக ஒப்பந்தக்காரர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ''எல்லா அரசு ஒப்பந்தங்களுக்கும் 40 சதவிகித கமிஷன் கேட்கப்படுவதால், பல ஒப்பந்தக்காரர்கள் பணி செய்ய இயலாத நிலை மட்டுமல்ல; சில தற்காலைகளும் நடக்கின்றன'' என்று அந்த அறிக்கையில் பகிரங்கமாக வெளியிடுகின்ற பரிதாப நிலை!
விளக்கை அணைத்துவிட்டு, இருட்டில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்தவர்களை தன்னந்தனியே சென்று விரட்டி, கையும் களவுமாகப் பிடித்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் என்ற செய்தியும் ஊடகங்களில் வெளிவந்துள்ளது!

சிறுபான்மைச் சமூகத்தவர் பழக்கவழக்கங்களையும், கல்வி உரிமைகளையும் பறித்து, பகிரங்கமாகவே அவர்களை மிரட்டி ஒதுக்கும் வேலைகளில் பா.ஜ.க. ஆதரவு அணிகளில் சிலர் நடந்து கொள்ளுகின்றனர்! தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்ட நிலையில்கூட, பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூடி, 'அனுமன் சாலிசா' பஜனை பாடி வாக்குத் திரட்டும் சட்டம் மீறிய செயல்பாடுகளும் கண்டனத்திற்குரியதாக்கப்பட்டு உள்ளது! லிங்காயத் சமூகத்தவர் 'இதற்குமுன்' பா.ஜ.க.வுக்கு ஆதரவு தந்தவர்கள்; தங்களது ஆதரவு காங்கிரசுக்குத்தான் இந்தத் தேர்தலில் என்று அறிவித்துள்ளதானது - தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்பது உறுதி! இது பா.ஜ.க.வை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர்களின் பிரச்சாரம், மல்லிகார்ஜூனே கார்கே போன்ற, காங்கிரஸ் தலைவர்களின் குடும்பத்தைக் கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டும், பிரதமர் 'இரட்டை என்ஜின்' பிரச்சாரத்தில் முக்கிய சாதனைகள், கொள்கைத் திட்டங்கள்பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெறுவதற்குப் பதிலாக, காங்கிரஸ் கட்சிமீதே கடும் தாக்குதல், சிறுபான்மையோர்குறித்து அண்மையில் வெளிவந்துள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம்பற்றிய பிரச்சாரம்தான் பிரதமரின் பிரதான இடத்தைப் பெற்றது என்பதே பா.ஜ.க.வின் அரசியல் எப்படி போய்க் கொண்டுள்ளது என்பதை அனைவருக்கும் புரிய வைக்கிறது!
கருநாடகத் தேர்தல் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஒரு திருப்புமுனையாக அமையவேண்டும் என்பதே நாட்டில் அரசமைப்புச் சட்டத்தை நம்பும் மதச்சார்பற்ற சமூகநீதி ஜனநாயகவாதிகளின் எதிர்பார்ப்பு ஆகும். பொறுத்துப் பார்ப்போம் - ஜனநாயகம் பிழைக்குமா? என்பதை! இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட்












Click it and Unblock the Notifications