Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“அண்ணாமலைக்கு ஒண்ணுமே தெரியாது.. தமிழ்நாட்டுக்கு விசுவாசமா இல்லை”.. வறுத்தெடுத்த டிகே சிவக்குமார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது. கட்சி அவருக்கு கொடுத்த வேலையை மட்டுமே செய்கிறார். அவர் கட்சிக்கு மட்டுமே உண்மையாக இருக்கிறார்.. தமிழ்நாட்டுக்கு உண்மையாக இல்லை" என விமர்சித்துள்ளார் கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவகுமார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு பெங்களூர் கிளம்புவதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், எந்த திட்டமும் இல்லாமல் நேற்றைய கூட்டம் நடந்ததாக அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Annamalai bjp dk shivakumar

அதற்கு பதிலளித்த அவர், "இங்கு அண்ணாமலை சொன்னது முக்கியம் இல்லை. பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்த நாட்டிற்கு என்ன சொன்னார்கள் என்பது தான் முக்கியம். அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது. கட்சி அவருக்கு கொடுத்த வேலையை மட்டுமே செய்கிறார். அவர் கட்சிக்கு மட்டுமே உண்மையாக இருக்கிறார்.. தமிழ்நாட்டுக்கு உண்மையாக இல்லை, அவர் வேலையை செய்யட்டும்" எனத் தெரிவித்தார்.

மாநில சட்டசபை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால் அது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த டிகே சிவக்குமார், "இதுகுறித்து ரேவந்த் ரெட்டி பேசி இருக்கிறார். முதலில் நமது ஒருங்கிணைந்த குரலை வலுவானதாக்குவோம். அதன் பிறகு அதுகுறித்து பேசலாம்" என்றார்.

தொடர்ந்து பேசிய டிகே சிவக்குமார், "இங்கு மாநிலத்தில் காங்கிரஸ் இருக்கின்றார்கள். இது திமுக அரசு ஏற்பாடு செய்த கூட்டம். 40 முதல் 50 அரசியல் கட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்திருந்தார். தென்னிந்தியாவை சேர்ந்த அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களை சேர்ந்ததவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங், கர்நாடகா துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் உள்ளிட்ட பல தலைவர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்க வந்த தலைவர்களுக்கு பாஜகவினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான கேள்விக்கு நேற்று பதிலளித்த டி.கே. சிவக்குமார், "பாஜக நடத்தும் கருப்புக்கொடி போராட்டத்தை வரவேற்கிறேன். என்னை அவர்கள் திகார் சிறையில் அடைத்தபோதுகூட பயப்படாதவன், அவர்கள் நடத்தும் இந்த கருப்புக்கொடி போராட்டத்துக்கா நான் பயப்படப்போகிறேன். அண்ணாமலையை எங்களுக்கு நன்றாக தெரியும். எங்கள் கர்நாடகாவில் தான் அவர் பணியாற்றினார். எங்களுடைய பலம் என்ன என்று அவருக்கும் தெரியும். அதனால் அவருக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த பதிவில்,"ஆம், நான் ஒரு காவல்துறை அதிகாரியாக கர்நாடக மக்களுக்காக சேவை செய்தேன். அதனை நினைவுகூர்ந்து என்னை குறிப்பிட்டு பேசியதற்கு நன்றி. இந்த எளிய மனிதனை வாழ்த்தியதற்கு நன்றி. மேலும், சித்தராமையாவை அவரது நாற்காலியில் இருந்து வீழ்த்தி கர்நாடக முதல்வராகும் உங்கள் அயராத முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்" எனத் தெரிவித்து இருந்தார். இருவருக்கும் இடையேயான வார்த்தை மோதல் தடித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+