விஜயகாந்த் எப்படி இருக்கிறார்.. சாலிகிராமம் வீடு முன் கண்ணீருடன் குவிந்த தொண்டர்கள்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் அவரது சாலிகிராம இல்லத்திற்கு தொண்டர்கள் வருகை தந்து வருகிறார்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அண்மைக்காலமாக உடல் நிலை சரியில்லாத நிலை உள்ளது. இதனால் அவர் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் காரணமாக ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு கிட்டதட்ட 15 நாட்களுக்கு மேல் சிகிச்சை மேற்கொண்டார். நடுவே அவரது உடல்நிலை சற்றுநிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதையடுத்து தேமுதிக பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அங்கு விஜயகாந்தின் உடல்நிலையை பார்த்து மக்கள் கடுமையாக வேதனை அடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் வழக்கமான பரிசோதனைக்காக மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது சளி மாதிரியை எடுத்து சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதியானது.
இதையடுத்து அவருக்கு வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் அவருடைய சாலிகிராமம் வீட்டுக்கு தொண்டர்களும், நிர்வாகிகளும் வருகை தருகிறார்கள். கண்ணீருடன் மிகவும் சோகமான நிலையில் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications