திடீர் டிவிஸ்ட்.. 40 தொகுதிக்கும் விருப்ப மனுக்களை பெறும் தேமுதிக.. விஜயகாந்த் திட்டம் என்ன?
லோக்சபா தேர்தலுக்காக தேமுதிகவில் வேட்பாளர் விருப்ப மனு விநியோகம் தொடங்கி உள்ளது.
சென்னை: லோக்சபா தேர்தலுக்காக தேமுதிகவில் வேட்பாளர் விருப்ப மனு விநியோகம் தொடங்கி உள்ளது. லோக்சபா தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தற்போது விருப்பமனு அளிக்கப்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது. திமுக கூட்டணியா, தேமுதிக கூட்டணியா, மூன்றாவது அணியா என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.
தேமுதிக இன்னும் தனது கூட்டணி நிலைப்பாட்டை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.பெரும்பாலும் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக கட்சி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன அறிவிப்பு
அதே சமயம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேமுதிக விருப்ப மனுக்கள் பெறும் என்று கடந்த வாரம் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்து இருந்தார். அதன்படியே தற்போது
லோக்சபா தேர்தலுக்காக தேமுதிகவில் வேட்பாளர் விருப்ப மனு விநியோகம் தொடங்கி உள்ளது.

அனைத்தும்
தேமுதிகவில் 40 தொகுதிகளுக்கும் விருப்பமனு விநியோகம் செய்து வருகிறது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விருப்ப மனுக்களை அளித்து வருகிறார். தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் இந்த நிகழ்வில் உடன் இருந்தார்.

என்ன விதி
மார்ச் 6ம் தேதிக்குள் விருப்பமனுக்களை பூர்த்தி அளிக்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் உறுப்பினர்களிடம் கூறப்பட்டுள்ளது. பொதுத் தொகுதியினருக்கு 10,000ரூபாயும், தனித் தொகுதியினருக்கு 20,000 ரூபாயும் வேட்புமனு கட்டணமாக வாங்கப்படுகிறது.

வாய்ப்புள்ளது
தேமுதிகவின் இந்த திடீர் நிலைப்பாடு அதிமுக , திமுக தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அதே சமயம், விருப்பமனுக்களை பெறுவது எல்லா கட்சியினரும் செய்ய கூடியதுதான், இதற்கும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தொடர்பில்லை என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications