கலவரம் செய்ய சதி.. பாஜக கூட்டணியின் ப்ளான்! அதிர வைக்கும் திமுகவின் புகார்! பரபர தேர்தல் களம்!
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் பாஜக சதி செய்ய இருப்பதாக தகவல் வருகிறது எனவும், பாஜகவின் B-Team ஆக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது, எனவே வாக்கு எண்ணும் மையங்களில் புகார் வரும் போது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக எதையும் சந்திக்க தயாராக உள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

முன்னதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதி இருந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," நடத்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிட்டது.
அனைத்து தரப்பு மக்களும் தளபதி தான் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க போகிறார் என்ற கருத்து தெரிவித்து வருகிறார்கள் என தெரிவித்தார். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏதேனும் வாக்கு எண்ணும் மையத்தில் திட்டமிட்டு ஏதேனும் செய்ய உள்ளார்கள் என்ற சமூக ஊடகங்களில் வருகிற செய்தியை அடிப்படையாக கொண்டு வரும் சந்தேங்களின் அடிப்படையில் எந்த புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்.
புகார் வரும் போது நடவடிக்கை எடுக்கிறன் என கூறுவார்கள் ஆனால் மாலை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் அதனால் தான் முன்கூட்டியே கடிதம் எழுதி உள்ளோம் என கூறினார். இரண்டு ஆண்டுகளாக SIR உள்ளிட்ட பல பணிகளில் திமுக கூட்டணிகள் இணைந்து சிறப்பாக பணியாற்றி உள்ளார்கள்.
அதனை கெடுக்கும் நோக்கில் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்வார்கள் எனவும் தேர்தல் ஆணையம் பாஜகவின் B டீமாக செயல்படுகிறது எனவும் தெரிவித்தார்.
திமுக எதையும் சந்திக்க தயாராக உள்ளது. பொதுவாக வாக்கு எண்ணும் மையங்களில் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் வர கூடாது என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்" என தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications