திமுக கூட்டணிக்குள் மீண்டும் மோதல்.. விசிக எம்எல்ஏ கருத்தால் காங்கிரஸ் கோபம்.. என்ன நடந்தது?
சென்னை: திமுக கூட்டணி (DMK Alliance) கட்சிகளுக்குள் மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ராமதாஸை திமுக கூட்டணிக்குள் கொண்டு வருவது தொடர்பாக காங்கிரஸ் கருத்து தெரிவித்து இருந்த நிலையில் இதற்கு விசிக கடும் எதிர்வினையாற்றியது. இந்தநிலையில் விசிகவின் கருத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பாமக - திமுக கூட்டணி பற்றி கூறி இருந்தார், தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. அதை சிதைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது.

ராமதாஸும் திருமாவளவனும்..
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை பிரித்து தனிமையாக்கி, அதன் வாக்கு வங்கியை குறைத்து, சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின வாக்குகளை சிதறடித்து தமிழகத்தை பிடித்துவிட வேண்டும் என மதவாத பாஜக கனவு காண்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக கூட்டணிக்குள் வருவதை திமுகதான் முடிவு செய்ய வேண்டும். திமுகதான் கூட்டணிக்கு தலைமை. ராமதாஸும், விசிக தலைவர் திருமாவளவனும் நெருக்கமாக இருந்தவர்கள் தான். இருவருக்கும் இடையே இடைவெளி எல்லாம் இல்லை. அவருக்கு ஒன்று என்றால் இவர் பேசுவார்.
எதிர்வினையாற்றிய விசிக
இவருக்கு ஒன்று என்றால் அவர் பேசுவார். தேவை என்றால் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி சரி செய்து கொள்வார்கள். அதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும்" என்று கூறினார். செல்வப்பெருந்தகையின் இந்த கருத்துக்கு விசிக கடும் எதிர்வினையாற்றியது. விசிக எம்.எல்.ஏ பாலாஜி இது தொடர்பாக கூறியதாவது:-
"கூட்டணியில் யார் யார் என்பதை திமுக முடிவெடுக்கும் என்பதைத் தான் நாங்களும் சொல்லி விட்டோமே. சாதியவாத, மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை விசிக மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை" என்று கூறியிருந்தார்.
செல்வப்பெருந்தகை கருத்து
விசிக - காங்கிரஸ் மோதலால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் செல்வப்பெருந்தகை இது தொடர்பாக தனது கருத்தை முன்வைத்து இருக்கிறார். செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி விவகாரங்களில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகவும், பொறுப்புடனும் எடுத்துரைத்திருந்தார்.
உண்மைக்கு புறம்பானவை
அந்தச் சந்திப்பில், திமுக தலைமையிலான கூட்டணியில் எந்த அரசியல் கட்சி சேர வேண்டும் அல்லது சேரக் கூடாது என்பது குறித்து அவர் எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என அவர் கூறியதாக வெளிவந்த செய்திகள் முற்றிலும் தவறானவை, உண்மைக்கு புறம்பானவை மற்றும் திரிக்கப்பட்ட செய்திகளாகும்.
உண்மையில், தமிழ்நாட்டின் அரசியல் நிலவரத்தை கருத்தில் கொண்டு, கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கு தலைமையாற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலேயே எடுக்கப்படும் என்பதையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.
கண்டிக்கத்தக்க செயலாகும்
இந்நிலையில், உண்மையை முழுமையாக அறிந்து கொள்ளாமல், ஊடகங்களில் வெளியான ஆதாரமற்ற செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி அவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.
கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நிலவும் நல்லுறவு, பரஸ்பர மரியாதை மற்றும் அரசியல் நாகரிகத்தைப் பேண வேண்டிய இத்தகைய காலகட்டத்தில், பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் தவறான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு கருத்துகளை வெளியிடுவது,
கூட்டணியின் ஒற்றுமைக்கும் அரசியல் நிலைத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலானதாகும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் கூறாத கருத்தை கூறியதாகப் பரப்பி, அதனை அரசியல் நோக்கத்துடன் திரித்து விளக்கி, உண்மை அறியாமல் கண்டனம் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
எனவே, உண்மைக்கு புறம்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கும், அத்தகைய செய்திகளை பரப்பியவர்களுக்கும் எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். என்று கூறியுள்ளார்.
-
சீட் நம்பரை குறைக்கும் திமுக.. ஏன் அதிக தொகுதிகள் வேண்டும்? அழுத்தமாக பேசிய கே.பாலகிருஷ்ணன்! -
திமுக - காங்., கூட்டணியில் புதிய புயல்.. ‘கை' வென்ற 7 தொகுதிகளை கேட்கும் ‘உதயசூரியன்'.. குழப்பம் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
1971 இல் மிருக பலம் பெற்ற திமுக! சுருண்டு விழுந்த காமராஜர்? இந்திராவுக்கு தண்ணி காட்டிய கருணாநிதி! -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு?












Click it and Unblock the Notifications