இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்!
சென்னை: ஒருபுறம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் போட்டியிட விருப்பமனு அளித்த கட்சியினரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். திமுகவில் 7 தொகுதிகளில் ஒருவர் பெயரில் மட்டும் விருப்ப மனு அளித்துள்ளனர். இதனால், இந்த 7 தொகுதிகளில், விருப்ப மனு அளித்துள்ள நபர்களுக்கே சீட் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதியும், புதுச்சேரிக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 9 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக தேர்தலுக்காக இதுவரை இல்லாத அளவிற்கு 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மதிமுகவிற்கு நான்கு தொகுதிகளும், இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், கொ.ம.தே.க கட்சிகளுக்கு 2 தொகுதிகளும், ம.ம.க 2 தொகுதிகளும், சிபிஐ-க்கு 5 தொகுதிகளும் இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விசிக மற்றும் தேமுதிகவிற்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சட்டசபை தேர்தல்களில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் நேர்காணல் செய்து வருகிறார். திமுக சார்பில் போட்டியிடுவதற்காக பிப்ரவரி 20 முதல் மார்ச் 6 வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உள்பட 15,372 பேர் விருப்ப மனுக்களை வழங்கினர். இந்த நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 17 ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்தத் தொடங்கினார்.
முதலில் புதுச்சேரியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெற்றது. 18 ஆம் தேதி கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான விருப்ப மனு அளித்திருந்த வேட்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினார்.
திமுகவில் 7 தொகுதிகளில் ஒருவர் பெயரில் மட்டும் விருப்ப மனு அளித்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் அனைத்து விருப்ப மனுக்களும் ஸ்டாலின் பெயரிலேயே வழங்கப்பட்டுள்ளன. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவிர வேறு யார் பெயரிலும் விருப்ப மனுக்கள் வரவில்லை.
அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, மூர்த்தி ஆகியோரின் தொகுதிகளில் இவர்களை தவிர யார் பெயரிலும் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பய்டவில்லை. எனவே இவர்கள் அனைவரும் அதே தொகுதிகளில் மீண்டும் களமிறங்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
-
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
அரைக் கிணறை தாண்டிய அறிவாலயம்.. அடம் பிடித்த கட்சிகளை கூட்டணியில் அடைத்த திமுக! யாருக்கு எவ்வளவு? -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
10 தொகுதிக்கு குறையக்கூடாது.. 3 காரணங்களுடன் மோத தயாரான விசிக.. திமுகவுக்கு அடுத்த நெருக்கடி -
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்.. காங்கிரஸ் பாணியில் விசிகவின் வியூகம் கைகொடுக்குமா -
யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து! -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக்












Click it and Unblock the Notifications