இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்!
சென்னை: ஒருபுறம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் போட்டியிட விருப்பமனு அளித்த கட்சியினரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். திமுகவில் 7 தொகுதிகளில் ஒருவர் பெயரில் மட்டும் விருப்ப மனு அளித்துள்ளனர். இதனால், இந்த 7 தொகுதிகளில், விருப்ப மனு அளித்துள்ள நபர்களுக்கே சீட் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதியும், புதுச்சேரிக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 9 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக தேர்தலுக்காக இதுவரை இல்லாத அளவிற்கு 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மதிமுகவிற்கு நான்கு தொகுதிகளும், இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், கொ.ம.தே.க கட்சிகளுக்கு 2 தொகுதிகளும், ம.ம.க 2 தொகுதிகளும், சிபிஐ-க்கு 5 தொகுதிகளும் இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விசிக மற்றும் தேமுதிகவிற்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சட்டசபை தேர்தல்களில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் நேர்காணல் செய்து வருகிறார். திமுக சார்பில் போட்டியிடுவதற்காக பிப்ரவரி 20 முதல் மார்ச் 6 வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உள்பட 15,372 பேர் விருப்ப மனுக்களை வழங்கினர். இந்த நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 17 ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்தத் தொடங்கினார்.
முதலில் புதுச்சேரியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெற்றது. 18 ஆம் தேதி கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான விருப்ப மனு அளித்திருந்த வேட்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினார்.
திமுகவில் 7 தொகுதிகளில் ஒருவர் பெயரில் மட்டும் விருப்ப மனு அளித்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் அனைத்து விருப்ப மனுக்களும் ஸ்டாலின் பெயரிலேயே வழங்கப்பட்டுள்ளன. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவிர வேறு யார் பெயரிலும் விருப்ப மனுக்கள் வரவில்லை.
அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, மூர்த்தி ஆகியோரின் தொகுதிகளில் இவர்களை தவிர யார் பெயரிலும் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பய்டவில்லை. எனவே இவர்கள் அனைவரும் அதே தொகுதிகளில் மீண்டும் களமிறங்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
-
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
நான் ஏன் முதல்வராக ஆகக்கூடாது என்று சொல்கிற காலம் வரும்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு -
“பிரச்சாரம் ரத்து என்பதில் உண்மை இல்லை.. விஜய் 24 மணி நேரமும் களத்திற்கு ரெடி” - CTR நிர்மல் குமார் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
என்னோட பேவரிட் தோனியை மிஸ் பண்ற பீலிங்கை அவாய்ட் பண்ண முடியல.. ஸ்டாலின் -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்











Click it and Unblock the Notifications