காங்கிரஸ் தலைமை முடிவு அதுதான்..தனிநபர் கருத்து முக்கியம் இல்லை..சூசகமாக பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
சென்னை: திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி உறுதியானது என்பதை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சூசகமாக பதிவிட்டுள்ளார். தனிநபர்களின் கருத்தை விடவும் கட்சியே மிகப்பெரியது என்று பதிவிட்டுள்ள மாணிக்கம் தாகூர், கட்சித் தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி தரப்பில் அதிக தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட், உள்ளாட்சியில் 20 சதவிகித இடம் என்று மிகப்பெரிய டிமாண்ட்டை முன் வைத்துள்ளது. ஆனால் திமுக தரப்பில் 29 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என்ற அளவில் இறங்கி வந்துள்ளது.

ஆனால் திமுகவின் இந்த ஆஃபருக்கே அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் தலைமையிடம் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதனால் களத்திலும் திமுக மற்றும் காங்கிரஸ் இடையில் ஒரு பிரிவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. இதனிடையே நேற்று முதல்வர் ஸ்டாலின் - ப.சிதம்பரம் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தியின் மெசேஜை ஸ்டாலினிடமும், ஸ்டாலினின் ஆஃபரை ராகுல் காந்தியிடமும் ப.சிதம்பரம் கூறிவிட்டார். இதன்பின் நேற்றிரவு செல்வப்பெருந்தகையின் மகள் அக்ஷய பிரியாவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு காங்கிரஸ் கட்சியின் சில மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்த நிலையில் ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. இதனால் இன்றைய தினமே வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில், திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி உறுதியாகிவிட்டதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சூசகமாக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் மாணிக்கம் தாகூர், தனிநபர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.. ஆனால் அதனைவிடவும் கட்சியே மிகப்பெரியது. காங்கிரஸ் கட்சித் தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நமது ஒற்றுமையாக நமது மிகப்பெரிய பலம் என்று பதிவிட்டுள்ளார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications