12 + 1 கேட்கும் காங்கிரஸ்.. நோ சொன்ன திமுக.. தொடரும் பஞ்சாயத்து.. தலையிடுவாரா ராகுல்?
திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.
Recommended Video

சென்னை: எல்லோருக்கும் முந்தி திமுகவும் காங்கிரசும் கூட்டணியை உறுதிபடுத்தி வைத்து கொண்டாலும் இன்னும் சீட் விவகாரத்தில் இழுபறியே நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் இருந்தே சிங்கிள் டிஜிட் சீட்தான் தர வேண்டும் என்பதில் திமுக கறாராக இருந்து வந்து கொண்டிருப்பதால்தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இதுவரை சுமூக முடிவு எட்டவில்லை.
காங்கிரஸ் இரட்டை இலக்கத்தில் 12 சீட்களுக்கு குறையாமல் கேட்க, திமுக அதற்கு திட்டவட்டமாக நோ சொல்லிவிட்டது. மேலும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் காங்கிரஸ் கேட்க, அதற்கும் இதுவரை எந்த பதிலும் திமுக தரப்பிலிருந்து வரவில்லை என தெரிகிறது.

தொகுதி பங்கீட்டு குழு
ஏனெனில் காங்கிரசின் ஓட்டு வங்கி இப்போது குறைந்துவிட்டது என்றும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு வழங்கிய பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதாலும், 6 முதல் 8 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக தொகுதி பங்கீட்டு குழுவில் உள்ள தலைவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

8 தொகுதிகள்
அதனாலேயே 8 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்படும் என திமுக கறாராக தெரிவிக்கப்பட்டதாம். இதனால் காங்கிரசில் கோஷ்டியில் ஒருவருக்கு சீட் கிடைப்பதே கேள்விக்குறியாகிவிட்டதாம். திமுக சார்பில் அளிக்கப்படும் 8 தொகுதிகளிலும், தாங்கள் சொல்லும் வேட்பாளர்களை போட்டியிட வைத்தால் அனைவரையும் வெற்றிபெற வைப்பது தங்கள் பாடு என அறிவாலய வட்டாரத்தில் உறுதி கொடுக்கப்பட்டதாம்.

நெளிகிறது
அதுமட்டுமல்ல, காங்கிரஸ் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக இந்தியாவிலேயே முதல்முறையாக ஸ்டாலின் அறிவித்ததால், டெல்லி தலைமையும் திமுகவுக்கு போதிய அழுத்தம் கொடுக்க முடியாமல் நெளிகிறதாம்.

பஞ்சாயத்து
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தொகுதி பங்கீடு பஞ்சாயத்துக்காக டெல்லி சென்றுள்ளதாக தெரிகிறது. மதிமுக, இடதுசாரிகள், விசிக போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால், 12 தொகுதிகள் வரை திமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மேலிடத்தில் வலியுறுத்தி வருகிறார்கள். அங்கு பஞ்சாயத்து பேசி முடிக்கப்பட்டு தொகுதி பங்கீடு விவகாரம் இறுதி கட்டத்தை அடையும் என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரத்தினர்.

புள்ளி விவர கணக்கு
மேலும், இந்த வாரம் டெல்லியில் இருந்து குலாம்நபி, கே.சி.வேணுகோபால், உள்ளிட்ட தலைவர்களில் யாராவது ஒருவர் பேச்சுவார்த்தையை பைனல் பண்ண அறிவாலயம் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொகுதியை குறைத்து கொடுப்பதற்கான காரணம் மற்றும் புள்ளி விவர கணக்குகளை காங்கிரஸ் தலைமையிடம் விளக்கமாக எடுத்துச்சொல்ல நாங்களும் தயாராக உள்ளதாக கூறுகின்றனர் திமுகவினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications