யார் இந்த "டாக்டர் எழிலன்".. ஜெயிச்சா அமைச்சர்தான்.. "சூப்பர் ஹீரோ"வின் மகன்.. திமுகவின் அதிரடி..!
டாக்டர் எழிலன் ஆரியம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்
சென்னை: திமுகவின் "சூப்பர் ஹீரோ" என்று புகழப்படும் தேர்தல் அறிக்கைகளின் தளகர்த்தராக திகழ்ந்த பேராசிரியர் மு. நாகநாதனின் மகன்தான் திமுகவின் சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் எழிலன் ஆவார்.
Recommended Video

பேராசிரியர் மு.. நாகநாதன், மறைந்த கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர்... அதிகம் அறியப்படாதவர் ஆனாலும் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர்..
தன்னை வெளிச்சத்தில் ஒருபோதும் காட்டிக் கொள்ள விரும்பாதவர், மிகுந்த அடக்கமானவர். அவர்தான் தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையே உலுக்கிய அதிரடி தேர்தல் அறிக்கையை திமுகவுக்காக தயாரித்து கொடுத்து அசரடித்தவர்.

திமுக
இலவச டிவி .. இதுதான் இன்று வரை திமுகவை தூக்கி நிறுத்தி வைத்திருக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது. தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையே புரட்டிப் போட்ட பல கட்சிகளுக்கு முன்னுதாரணமாக திகழும் பல்வேறு இலவச அறிவிப்புகளை தனது தேர்தல் அறிக்கையில் இடம் பெற வைத்து திமுகவுக்கு உயர்வு கொடுத்தவர்தான் நாகநாதன். அவரது மகன்தான் டாக்டர் எழிலன்.

ஆயிரம் விளக்கு
சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் எழிலன். கருணாநிதியின் கடைசிக்காலத்தில் அவருடனேயே இருந்தவர். காவிரி மருத்துவமனையில் பொது மருத்துவராக இருக்கும் எழிலன், நீட் விவகாரத்தில் மிகத் தீவிரமாக செயல்பட்டவர். இவருக்குத்தான் ஆயிரம் விளக்கு தொகுதியில் சீட் கொடுத்துள்ளது திமுக.

டாக்டர் எழிலன்
திமுகவுக்காக மட்டுமல்லாமல் சமுதாய பிரச்சினைகளுக்காகவும் தீவிரமாக குரல் கொடுத்து வருபவர் எழிலன். அவருக்கு சரியான நேரத்தில் சீட் கொடுத்துக் கெளரவித்துள்ளது திமுக... இத்தனைக்கும் நாகநாதன் திமுகவில் தீவிரமாக செயல்பட்டவர் கிடையாது. ஆனால் தீவிர திராவிட சிந்தனையாளர் ஆவார்.. அதன் விளைவாகத்தான் பல்வேறு இலசவ அறிவிப்புகளை திமுகவின் தேர்தல் அறிக்கையில் அவர் இடம் பெறச் செய்தார்.

அமைப்பு
அவையெல்லாம் சமுதாயத்தில் பெரும் புரட்சிகளையே ஏற்படுத்தியவை என்பதை மறந்து விட முடியாது. டாக்டர் எழிலன், "இளைஞர் இயக்கம்" என்ற அமைப்பையும் நிறுவி நடத்தி வருகிறார். ஈழத் தமிழர் பிரச்சினைக்காக உரத்துக் குரல் கொடுத்தவர். கூடங்குளம், நெடுவாசல் என அனைத்து சமூகப் பிரச்சினைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருபவர்... சேலம் எட்டு வழிச்சாலை போராட்டத்திலும் தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications