3-வது நாளாக விருப்ப மனு விநியோகம்... திமுக தலைமையகத்தில் ஏராளமானோர் குவிந்தனர்
சென்னை: மூன்றாவது நாளாக திமுக தலைமையகத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வினியோகிக்கப்படுகிறது.
கடந்த 25ஆம் தேதி முதல் விருப்ப மனு வினியோகிக்கப்படுகிறது. இந்த விண்ணப்ப விநியோகத்தில், நாடாளுமன்ற தேர்தல் விண்ணப்பங்களோடு, காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான விண்ணப்பங்களும் வினியோகிக்கப்படுகின்றன.

இதனை, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகின்ற திமுகவினர் பெற்று செல்கின்றனர். தற்போது வரை 200 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுக்களை மார்ச் 1ம் தேதி முதல் 7ம் தேதி மாலை 6மணி வரை தலைமை அலுவலகத்தில் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன் வகையில், திமுகவினர் விருப்ப மனுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதேபோல், அதிமுகவில் 1,710 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications