ஆட்டம் ஆரம்பம்! புகுந்து விளையாடும் திமுக ஐடி விங்! பெருச்சாளிகளுக்கு ஆப்பு உறுதி! ராஜா எச்சரிக்கை!
சென்னை: திமுக அரசு மீதும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும் அவதூறு பரப்புவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
ஐடி விங் ரிப்போர்ட்ஸ் என்ற பெயரில் இதற்காக தனி டீமை களமிறக்கியுள்ள டி.ஆர்.பி.ராஜா, முதல்வர் குறித்து அவதூறு பதிவுகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே வன்மம் கக்கும் பெருச்சாளிகள் இனி சிக்குவார்கள் என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவாக வெளியிட்டு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

திமுக ஐடி விங்
திமுக ஐடி விங் மாநில செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. பொறுப்பேற்றது முதல் அந்த அணியில் பல அதிரடி மாற்றங்களை அரங்கேற்றி வருகிறார். செயல்படாத நிர்வாகிகளிடம் இருந்து பொறுப்புகளை பறித்து ஆர்வமுடன் சமூக வலைதளங்களில் இயங்கி வரக்கூடிய நபர்களுக்கு பொறுப்புகளை கொடுக்க தயாராகிவிட்டார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே திமுக ஐடி விங்கில் ஐடி விங் ரிப்போர்ட்ஸ் என்ற பெயரில் ஸ்பெஷல் டீம் ஒன்றையும் களமிறக்கியுள்ளார் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ.

என்ன பணி?
திமுக ஐடி விங் ரிப்போர்ட்ஸ் குழுவின் பணி என்னவென்றால், யாரெல்லாம் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் திமுக அரசு பற்றியும் அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்களோ அவர்களை ஜெயிலுக்கு அனுப்புவதே ஆகும். ஆம், அண்மையில் கூட விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த நாகராஜ் என்பவர் போலி கணக்கு மூலம் ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் பற்றி பதிவிட்டிருந்தார். சரசரவென்று அந்த அக்கவுண்ட் யாருடையது அவரது பின்னணி என்ன என்பதை ஆராய்ந்த திமுக ஐடி விங் ரிப்போர்ட்ஸ் குழு போலீசுக்கு புகாரை தட்டிவிட்டது.

கைது நடவடிக்கை
இதையடுத்து உடனடியாக அந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஐடி விங் என்றால் சும்மாவா எனக் கேட்கும் அளவுக்கு இப்போது இறங்கி அடிக்க ஆரம்பித்துள்ளார் டி.ஆர்.பி.ராஜா. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''கழகத்தின் மீதும் முதலமைச்சர் மீதும் சமூக வலைதளங்களில் அவதூறு, பொய்யான பதிவு போடுபவர்கள் மீது திமுக ஐடி விங் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கென ஐடி விங் ரிப்போர்ட்ஸ் என்ற சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விஷமிகள் மீதான நடவடிக்கை தொடர்கிறது.'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெருச்சாளிகள்
மேலும் தொடர்ந்து பதிவிட்டுள்ள டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., ''சமூக வலைதளங்களில் பொதுவாழ்வில் இருப்போர், குறிப்பாக பெண்கள் மீது மிகவும் கீழ்தரமாக ஆபாசமாக கொச்சையாக வன்மத்தை கக்கிவரும் முகம் காட்டாமல் திரியும் பெருச்சாளிகள் பலர் இருக்கிறார்கள். இனி சிக்குவார்கள்.'' என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications